புதுடில்லி, மே.7- மணல் குவாரி வழக்கு விவகாரத்தில் விசார ணைக்கு வரும் மாவட்ட ஆட்சி யர்களை தேவையின்றி காக்க வைக்கக் கூடாது என்று அம லாக்கத் துறைக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் குவாரி வழக்கு
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய் ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோத னைகள் நடத்தி பல்வேறு ஆவ ணங்களை பறிமுதல் செய் துள்ளது.
இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரி மங்கள் தொடர்பான விவ ரங்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களுடனும் ஆஜராகும் படி, அந்தந்த மாவட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.
5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்
இந்த அழைப்பாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக் கத்துறை சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் யப்பட்டது. இந்த மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்றம் 5 மாவட்ட மாவட்ட ஆட்சியர்களும் சென் னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தர விட்டது.
இந்நிலையில் மேல்முறையீடு வழக்கு தொடர்பான விசா ரணை நேற்று (6.5.2024) மீண்டும் நடைபெற்றது. அப்போது தமிழ் நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி, மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் ஆகியோர் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று 5 மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறை அலுவலகத் தில் கடந்த 25-ஆம் தேதி ஆஜ ரானார்கள்.
அழைப்பாணையில் கேட்கப்பட்டிருந்தவற்றை அளித்து விட்டனர். காலை 11 மணிக்கு அழைக்கப்பட்டு இரவு 8.30 மணி வரை அமரவைக்கப் பட்டனர் என வாதிட்டார்.
காக்க வைக்கக்கூடாது
அப்போது நீதிபதிகள், அவ் வாறு காத்திருக்க செய்யக் கூடாது. தேவையில்லாமல் மாவட்ட ஆட்சியர்களை காக்க வைத்து. அலைக்கழிக்கக்கூடாது என தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சோயிப் உசேன், சம்மனில் கேட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சி யர்கள் தாக்கல் செய்யவில்லை. சில தினங்களில் தாக்கல் செய் வதாக தெரிவித்து சென்றனர். இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகா சம் தேவை என வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான விசார ணையை அடுத்த மாதத்துக்கு (ஜூலை) தள்ளி வைப்பதாகவும், அதற்குள் அமலாக்கத்துறை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.