புதுடில்லி மே 6 நேபாள அரசு கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தை வெளியிட்டது. அதில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த லிபுலேக், கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்திற்கு உட்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. நேபாளத்தின் தன்னிச்சையான இந்த முடிவை ஏற்க முடியாது என கூறியிருந்தது. இந்நிலையில், நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசந்தா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், இந்திய பகுதிகளுடன் கூடிய சர்ச்சைக்குரிய வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஒப்புதல் தரப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகள், பழைய 100 ரூபாய் நோட்டுக்கு பதிலாக மாற்றப்படும் என நேபாள அரசு அறிவித்தது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீனாவை அடுத்து இந்தியாவை சீண்டிப் பார்க்கும் நேபாளம் இந்திய பகுதிகளோடு கூடிய வரைபடத்தை தனது ரூபாய் நோட்டில் அச்சடித்து வெளியிட்டது
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books