பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் மோடி பெண்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

Viduthalai
2 Min Read

கருநாடகப் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தல்!

ராய்ச்சூர்,மே 6- பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவ காரம் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தைக் காட்டி பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கருநாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் பிரஜ் வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்றார். இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உள் ளூர் பா.ஜ.க. தலைவர் தேவராஜ் கவுடா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கடிதம் எழுதியுள்ள தாகவும், அந்த கடிதத்தின் நகலை கையில் எடுத்துக் காண் பித்து ராகுல் காந்தி சுட்டிக் காட்டினார்.
அந்த கடிதத்தில், ஒரு பென் டிரைவ் முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் அத் துமீறல் காட்சிப் பதிவுகள் உள்ளன என்று பா.ஜ.க. நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவ்விஷயத்தில் அமித்ஷா எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. அதே சமயம் நாட்டின் பிரதமர், பாலி யல் குற்றச்சாட்டில் தொடர் புடையவருக்கு ஆதரவாக மக் களிடம் வாக்குச் சேகரிக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாது காத்து வருகிறார்? எதற்காக அவர் மக்களிடம் அவருக்கு வாக்கு கேட்கிறார்? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விஷயத்தில் இந்திய நாட்டு பெண்கள் அனைவ ரையும் பிரதமர் அவமதித் துள்ளார் என்றும், எனவே, பெண்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் அனைத் தையும் அறிந்த பிறகும் மோடி யும், அமித் ஷாவும் அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது ஏன்? எதற்காக அப்படி செய்தார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத் தினார்.

இதற்கிடையே, கருநாட காவை உலுக்கிய பாலியல் வன் கொடுமை வழக்கில், குற்ற வாளிகள் அனைவரையும் சட் டத்தின்முன் நிறுத்தி, விரைந்து தண்டிக்க உறுதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கருநாடக முதலமைச்சர் சித்தரா மையாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு பாதுகாக் கிறது என்றும், அவர் வெளிநாடு தப்பிச்செல்ல ஒன்றிய அரசு உதவி செய்துள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள் ளார். பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள் ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *