பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு அஞ்சி ஓட்டம் பிடித்த மேற்குவங்க ஆளுநர்

Viduthalai
1 Min Read

கொல்கத்தா, மே 6- கேரளாவைச் சேர்ந்த மேனாள் அய்.ஏ.எஸ். அதிகா ரியும், பிரதமர் மோடிக்கு மிக நெருக் கமான வருமான சி.வி.ஆனந்த் போஸ் மேற்கு வங்க மாநில ஆளுநராக உள்ளார். இவர் தன்னுடைய ஆளுநர் மாளிகையில் பணி புரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்குவதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஹரே ஸ்ட்ரீட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், எனது புகார் மீது விசாரணை மேற்கொள்ள மாநில காவல் துறையினர் ஆளுநர் மாளிகைக்கு வரக்கூடாது என சி.வி.ஆனந்த் போஸ் அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கையை கண்டுகொள்ளா மல் மேற்கு வங்க அரசு பாலியல் புகார் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (சிஅய்டி) அமைத்து, புகார் அளித்த பெண் உள் பட ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு அழைப்பாணையும் அனுப்பியுள்ளது.
இதனால் தன் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என அறிந்து கொண்ட ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கு ஓட்டம் பிடித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *