மோடி உறுதி அளித்த விவசாயிகளுக்கான இரண்டு பங்கு வருவாய் கிடைத்ததா? அகிலேஷ் கேள்வி

1 Min Read

படான், மே 6 மூன்றாம் கட்ட தேர்தலின் போது உத்தரப் பிரதேசத்தி;ல் பாஜகவை மக்கள் துடைத்து வீசுவார்கள் என அகிலேஷ் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படானில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அகிலேஷ் தனது பிரச்சாரத்தின் போது,

“வரும் மே 7-ஆம் தேதி நடை பெறும் 3ஆ-வது கட்ட தேர்தலில் பாஜகவை மக்கள் 7 மைல்களுக்கு அப்பால் தூக்கி வீசுவர். அவர்கள் இந்த தேர்தலில் முழுமையாக துடைத்து எறியப்படுவர். எற்கெ னவே முதல் இரண்டு கட்டங்களில் மக்கள் பாஜகவை கவிழ்த்து. மூன் றாவது கட்டத்தில் இவர்களை துடைத்தெறியப் போகிறார்கள்.
அவர்கள் விவசாயிகள் வரு மானம் இரட்டிப்பாக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். இன்று விவசாயிகள் தங்கள் வரு வாயை கணக்கிட்டால், கவலையே மிஞ்சும். ஏனென்றால் விலைவாசி உயர்வால் உற்பத்திக்கு தகுந்த வருவாயை ஈட்ட முடியவில்லை. விவசாய உற்பத்திக்கான செலவை அரசும் வழங்கவில்லை’

பா.ஜ.க. அனைத்துப் பிரிவினருக்கும் போலி வாக்குறுதி அளித்துள்ளது. பாஜகவினர் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய் யாகவே மாறி உள்ளது. எனவே ஆத்திரமடைந்த மக்கள் பாஜகவை தூக்கி வீசுவது உறுதி” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *