சமூக நீதி நாளான தந்தை பெரியார் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாடிட கழகக் கலந்துரையாடலில் முடிவு

Viduthalai
1 Min Read

தஞ்சை, செப்.10 – 04-09-2023 அன்று உரத்தநாடு ஒன்றிய, நகர கலந் துரையாடல், 05-09-2023 அன்று  தஞ்சாவூர் மாநகர கலந்துரை யாடல், 06-09-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்ட கலந் துரையாடல், 06-09-2023 அன்று திருச்சி மாவட்ட கலந்துரையாடல் ஆகி யவற்றில் _ செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது வீதிகள் இல்லங் களில் கழகக் கொடி ஏற்றி இனிப் புகள் வழங்குவது.  ஒலிப்பெருக்கி வைத்து பெரியார் கொள்கைகளை  பரப்புவது, சுற்றுச்சூழலை பாது காக்க மரக்கன்றுகள் நடுவது, குருதிக் கொடை வழங்குவது, பெரியார் பட ஊர்வலங்களை நடத்து வது, பெரியார் பட சுவ ரொட்டிகளை நகரங்கள், பேரூ ராட்சிகள்,கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டுவது, பெரியார் பிறந்த நாள் விழா பேர ணிகளை நடத்துவது, நாள் முழு வதும் விழாக்கோலமாக எழுச் சியுடன் கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *