பாட்னா, மே 5- பீகாரின் அரசியலில் 34 வயது இளைஞரான தேஜஸ்வி எழுச்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பீகாரில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்டத் தேர்தல்கள் 9 தொகுதிகளில் முடிந்துள்ள நிலை யில் அடுத்த கட்டத் தேர்தல் பிரச்சாரங்களில் தேஜஸ்வி பிரச்சாரம் நாடு முழுக்க கவனம் பெற்று வருகிறது.
ஹிந்தி பெல்ட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல் அல்லாமல், பீகாரில் வேலை வாய்ப்பு என்பதே தேர்தலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. அந்த விவாதத்தினை வீரியமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருப்பது தேஜஸ்வி யாதவ்தான். ஹிந்தி பெல்ட்டில் பாஜக பலமாக உள்ளதாக சொல்லப்படும் நிலையில், அந்த பெல்ட்டின் முக்கிய மாநிலமான பீகாரைக் கைப் பற்றுவது இந்த முறை பாஜகவிற்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது என்பதே அரசியல் விமர்சகர்கள் சொல்லக் கூடிய கருத்தாக இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணமாக பார்க்கப்படுவது தேஜஸ்வி வியூகங்களும் அனல் பறக்கும் பிரச்சாரமும் தான். தேஜஸ்வி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு யார் இந்த தேஜஸ்வி என்பதைப் பார்ப்போம்.
யார் இந்த தேஜஸ்வி?
பீகாரில் நடப்பது காட்டாட்சி என்று சொல்லி 1990 லிருந்து 2005 வரை இந்தியா முழுக்க ஒரு வில்லனைப் போல பாஜகவால் வர்ணிக்கப்பட்ட வர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத். அத்வானியின் ‘ரத யாத் திரை’யால் நாடு முழுக்க மத ரீதியான பிரச்சி னைகள் உருவானபோது, அந்த ‘யாத்திரையை’ நிறுத்தி அத்வானியை கைது செய்ய உத்தர விட்டவர் லாலு. அந்த காலக்கட்டத்திலேயே ஹிந்துத்துவ அரசியலுக்கு சிம்ம சொப்பனமாக பார்க்கப் பட்டவர். அப்படிப்பட்ட லாலுவுக்கும் ராப்ரி தேவிக்கும் 1989 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் தேஜஸ்வி.
2015 ஆம் ஆண்டு பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் தேஜஸ்வி.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்ட னைக்கு உள்ளாகி லாலு பிரசாத் யாதவ் சிறைக்குச் சென்ற போது 28 வயதில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு தலைமையேற்கும் பொறுப்பு தேஜஸ்விக்கு வந்தது. லாலு சிறைக்குச் சென்ற பிறகு ராஷ்டிரிய ஜனதா தளம் பல பின்னடை வுகளை சந்தித்துக் கொண்டிருந்தது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. பாஜக-நிதிஷ் குமார் கூட்டணி பீகாரில் 40 நாடாளு மன்றத் தொகுதிகளில் 39-அய்க் கைப்பற்றியது.
சவால்களை வென்று தனிப்பெரும் தலைமையாக உயர்ந்த தேஜஸ்வி
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் இனிமேல் மீண்டெழுவது கடினம் என்று அரசியல் விமர் சகர்கள் பேச ஆரம்பித்தனர். இந்த நிலையில் தான் தேஜஸ்வி பீகார் முழுதும் சுற்றிச் சுழல ஆரம்பித்தார். அடுத்த ஆண்டே 2020 இல் பீகாரில் சட்டமன்றத் தேர்தலும் வந்தது.
தனித்துவமான முறையில் தேஜஸ்வி மேற்கொண்ட பிரச்சாரங்களில் கூட்டம் திரண்டு கொண்டே இருந்தது. 75 சட்டமன்றத் தொகுதி களை ராஷ்டிரிய ஜனதா தளம் கைப்பற்றியது. மிகச் சிறிய எண்ணிக்கை வித்தியாசத்தில் தான் முதலமைச்சராகும் வாய்ப்பை இழந்தார் தேஜஸ்வி.
17 மாதங்கள் துணை முதலமைச்சர்
2022 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கூட்டணியில் இணைந்ததால் பீகாரின் துணை முதலமைச்சரானார் தேஜஸ்வி. மீண்டும் நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்கு செல்வதற்கு முன்பு 17 மாதங்கள் துணை முதலமைச்சராக இருந்தார் தேஜஸ்வி. அப்போது பீகாரில் லட்சக்கணக்கான அரசு வேலை வாய்ப் புகளை அவர் புதிதாக ஏற்படுத்தியது இளை ஞர்கள் மத்தியில் தேஜஸ்விக்கான ஆதரவினை கூட்டியிருக்கிறது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பீகார் முழுதும் தேஜஸ்வி மேற்கொண்ட நடைப் பயணத்தில் அவருக்கு திரண்ட கூட்டம் அனைவரின் கவனத்தையும் அவரை நோக்கி திருப்பியுள்ளது. தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக தேஜஸ்வி மாறியிருக்கிறார்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அடையாளத்தை மாற்றும் தேஜஸ்வி
பீகாரில் அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர் தேர்வில் ஜாதி என்பது மிக முக்கியமான காரணி யாக இருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை பீகாரின் முன்னேறிய ஜாதிகள் மத்தியில் பெரும் செல்வாக்கை செலுத்துகிறது. பாஜக போட்டி யிடும் 17 தொகுதிகளில் 10 வேட்பாளர்கள் முன் னேறிய வகுப்பினைச் சேர்ந்தவர்கள்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரை அது எப்போதும் யாதவ்-முஸ்லீம் கட்சியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. யாதவ் மற்றும் முஸ்லீம் கள் சேர்ந்து பீகாரின் மக்கள் தொகையில் 31% இருப்பது ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு பலம் தான். ஆனால் அதைத் தாண்டிய ஒரு அடை யாளத்தை உருவாக்க தேஜஸ்வி முயற்சித்து வருகிறார்.
அக்கட்சி போட்டியிடும் 26 தொகுதிகளில் 9 வேட்பாளர்கள் யாதவ் சமூகத்தைச் சேர்ந்த வர்கள். மற்ற 17 வேட்பாளர்களில் ஓபிசி, ஈபிசி, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முஸ்லீம்கள் என்று அனைவரும் இடம்பெற வேண்டுமென்று கணக்கு போட்டு வேட்பாளர்களை களமிறக்கி யுள்ளார் தேஜஸ்வி.
ஜாதிக் கணக்குகளுக்கு அப்பால் முக்கியத்துவம் பெறும் கோரிக்கைகள்
பீகாரில் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு இந்த தேர்தலில் வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வறுமை போன்றவை முக்கியமான விவாதங்களாக உள்ளன.
பீகார் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருப்பதால் அம்மாநிலத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்க சிறப்பு தகுதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மோடி மற்றும் நிதிஷ் குமார் இருவரும் இந்த தேர்தலில் இந்த கோரிக்கை குறித்து மவுனம் காக்கும் நிலையில், இதனை மிகவும் வலுவாக கையிலெடுத்திருக்கிறார் தேஜஸ்வி.
போகும் இடமெல்லாம் மோடி அவர்களே நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பீகாருக்கு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்வியை தவறாமல் எழுப்பி வருகிறார்.
பாஜகவின் பரப்புரைக்கு பதிலடி
தேஜஸ்வி யாதவ் பொரித்த மீனை சாப்பிடும் காட்சிப்பதிவைப் பரப்பி நவராத்திரி நாளன்று அசைவம் சாப்பிடுகிறார் என்று சொல்லி மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக பாஜக தலைவர்கள் தேஜஸ்வி மீது சமூக வலைதளங் களில் தாக்குதல் தொடுத்தனர்.
அதற்கு தேஜஸ்வி ஹெலிகாப்டரில் இருந்து ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டுக் கொண்டே காட்சிப்பதிவை போட்டு பதிலடி கொடுத்தார். இன்று நான் ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் பாஜக தலைவர்கள் எரிச்சலடைவார்கள். ஆரஞ்சு கலர் கொண்ட பழத்தை நான் சாப்பிடுவதால் அவர்கள் மனம் புண்படலாம் என்று பதிலடி கொடுத்தார்.
”அவர்கள் உணவில் அரசியல் செய் கிறார்கள். ஏனென்றால் அவர்கள் உண்மையான பிரச்சினைகளை பேச விரும்புவதில்லை. ஆனால் நாங்கள் உண்மையான பிரச்சினை களைத் தான் பேசுவோம். வேறு எதையும் பேச மாட்டோம்” என்று அதனை எதிர்கொண்டார்.
மோடியின் கேரண்டிகளை டார்கெட் செய்யும் தேஜஸ்வி
17 மாத ஆட்சியில் நாங்கள் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கொடுத்தோம். காண்ட்ராக்ட் பணியில் இருந்த மூன்றரை லட்சம் பள்ளி ஆசிரியர்களை அரசுப் பணியாளர்களாக உயர்த்தினோம். ஆனால் 10 ஆண்டு காலத்தில் நீங்கள் செய்தது என்ன என்று மோடியை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்.
அதேபோல் ஜாதி வாரி கணக்கெடுப்பிற்காக தேஜஸ்வி செய்த வேலைகளும் மிக முக்கிய மானதாக பார்க்கப்படுகின்றன. ஜாதிவாரி கணக் கெடுப்பும், சமூக நீதி முழக்கமுமே பாஜகவின் இந்துத்துவ அரசியலை பின்னுக்குத் தள்ளும் முக்கியமான கருவி என்று அதனை வீரியமாக கையில் எடுத்துள்ளார் தேஜஸ்வி.
மேடையில் பயன்படுத்தும் வித்தியாசமான யுக்தி
இந்த முறை பல வித்தியாசமான யுக்திகளை பிரச்சார மேடைகளில் காட்டி வருகிறார் தேஜஸ்வி. அதில் சமீபத்தில் மேடையில் ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கரோடு ஒலிவாங்கியை நோக்கி வந்தார் தேஜஸ்வி. மேடையில் இருந்த அனைவ ரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, அந்த ஒலிபெருக்கியை கையில் வைத்துக் கொண்டு ஆன் செய்து ஒலிவாங்கியின் முன்பு நீட்டினார். அதில் 2014 ஆம் ஆண்டு மோடி தேர்தல் பிரச்சாரங்களில் பீகாரில் பேசிய பல க்ளிப்புகள் இணைக்கப்பட்ட ஒலிப்பதிவு ஓடியது. மோடி விலைவாசி உயர்வைப் பற்றியும், வேலைவாய்ப்பின்மையைப் பற்றியும், பீகா ருக்கு சிறப்பு தகுதி வழங்குவேன் என்றும் பேசிக் கொண்டிருந்தார்.
மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் பீகாரின் பிரச்சினைகளை சரிசெய்ய 1.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்குவோம் என்றும், தேவைப்பட்டால் பீகாருக்கு சிறப்பு தகுதி வழங்குவோம் என்றும் மோடி பேசியிருந்தார்.
மேலும் 500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த போது, ”50 நாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள், எல்லா பிரச்சினைகளும் சரியா கா விட்டால் நீங்கள் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்” என்று மோடி பேசியது ஓடிக்கொண்டிருக்கும்போதே, ”50 நாட்களை விடுங்க..10 ஆண்டுகள் உங்களை நாங்கள் சகித்துக் கொண்டு விட்டோம். இனியா வது எங்களை விட்டு விடுங்கள்” என்று தேஜஸ்வி அடித்த கமெண்ட் நேஷனல் நியூசாக எகிறியது.
மோடியின் பிரச்சாரங்களை எதிர்கொள்ளும் விதம்
400 சீட்டுகளை கைப்பற்றுவோம் என்று மோடி பேசியதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ”அவர் இப்போது அந்த முழக் கத்தை மறந்துவிட்டார். அவரோட ’400 சீட்டு’ என்கிற படம் முதல் கட்டத் தேர்தலிலேயே ஃப்ளாப் ஆகிவிட்டது. இரண்டாம் கட்டத் தேர்தலில் அந்த படம் ரிலீசே ஆகாது. பீகார் உங்களுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கப் போகிறது” என்று கூலாக பதில் கொடுத்தார்.
“நான் பிரதமரிடம் இந்த ஒன்றை மட்டும்தான் சொல்ல வேண்டும். நான் கையெடுத்துக் கும் பிட்டு இதை சொல்கிறேன். வெறுப்பு அரசியலை விட்டுவிடுங்கள். உண்மையான பிரச்சினைக ளைப் பற்றி பேசுங்கள். இங்கு வறுமையிலிருந்து மீள்வதற்கும், விலைவாசியை எதிர்கொள்வதற் கும் எல்லோருக்கும் வேலை தேவை. நீங்கள் சொல்லுங்கள். இந்த 10 ஆண்டுகளில் இந்த நாட்டுக்கோ அல்லது பீகாருக்கோ செய்தது என்ன? இதைப் பற்றி பேசாமல் எப்போது பார்த் தாலும் கோவில்களைப் பற்றியும் முஸ்லீம்களைப் பற்றியுமே குரலை உயர்த்திக் கொண்டிருப்பது நல்லதல்ல” என்று சொல்லி, பாஜகவின் பிரச் சாரத்திற்கு பின்னால் ஓடாமல், மீண்டும் வேலை வாய்ப்பு சிக்கலை பீகாரின் மய்ய விவாதத்துக்கு கொண்டுவந்து நிறுத்தினார்.
அதேபோல் பாஜக அரசியல் சாசனத்தை மாற்றுவதற்காகவே 400 சீட்டுகள் என்பதை சொல்லி வருகிறது என்பதையும் எல்லா மேடை களிலும் சொல்லி வருகிறார்.
34 வயது இளைஞரான தேஜஸ்வி மோடிக் கும், நிதிஷ்குமாருக்கும் பீகாரில் கொடுத்துக் கொண்டிருக்கும் சவால் நாடு முழுவதுள்ள அனைத்து அரசியல் விமர்சகர்களின் பார்வை யையும் பீகாரின் பக்கம் திருப்பியுள்ளது. கடந்த முறை 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை வென்ற பாஜகவை, இந்த முறை எத்தனை தொகுதிகளை இழக்கச் செய்யப் போகிறார் தேஜஸ்வி என்று நாடு முழுவதும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அத்வானியின் தேரை லாலு நிறுத்தினார்; மோடியின் தேரை தேஜஸ்வி நிறுத்துவார் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் அடித்துச் சொல்லி வருகிறார்கள்.