காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்போம்-ராஜபுத்திரர்கள் உறுதிமொழி

viduthalai
1 Min Read

அகமதாபாத், மே 5- வடமாநிலங் களில் பாஜகவிற்கு எதிரான ராஜபுத்திரர்களின் எதிர்ப்பு அலை தீவிரமடைந்து வரும் நிலையில், குஜராத், உத்தரப்பிர தேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவை தேர் தலுக்கான பிரச்சா ரம் செய்யும் பாஜக வேட்பாளர்களை ராஜ புத்திரர்கள் விரட்டியடித்து வருகின்றனர்.
குறிப்பாக குஜராத் மாநிலத் தில் ஒவ்வொரு நாளும் 3க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதி யில் ராஜபுத்திரர்கள் பொதுக் கூட்டங்களை நடத்தி “பாஜக விற்கு வாக்களிக்க மாட்டோம்” என உறுதி மொழி ஏற்று வருகின் றனர். இதனால் ஜாம்நகர், பாவ் நகர், பாரூச் உள்ளிட்ட 7 மக்க ளவை தொகுதிகளில் பாஜக தேர் தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், 3.5.2024 அன்று ஜாம்நகர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் “பாஜக விற்கு வாக்க ளிக்க மாட்டோம்” என ராஜ புத்திரர்கள் உறுதிமொழி ஏற்று “காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப் போம்” என அறிவித்துள்ளனர். ஜாம்நகர் ராஜபுத்திர மகாஜன சபையின் இந்த அறிவிப்பை குஜராத் மாநிலம் முழுவதும் செயல்படுத்த ராஜபுத்திரர்களின் மாநில தலைமை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ள நிலையில், இந்த அறி விப்பு பாஜகவிற்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *