பிரஜ்வல் மீது வழக்கை தொடர்ந்து அவரது தந்தை ரேவண்ணாவும் கைது

2 Min Read

பெங்களூரு, மே 5 பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும், மேனாள் அமைச்சரும், பிரஜ்வலின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணா மீது இரண்டாவது எஃப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு கேஆர் நகர் காவல் நிலையத்தில் ரேவண்ணா மீது இந்த இரண்டாவது எஃப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது இந்த எஃப்அய்ஆர் பதிவு செய்யப்பட் டுள்ளது. இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 376(2)(N), 506, 354A(1), 354(B), 354(C) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட் டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் எச்.டி. ரேவண்ணாவின் பிணை மனு விசா ரணைக்கு வரும் முன்னர் இந்த எஃப் அய்ஆர் பதிவு செய்யடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை பின்னணி: மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதி யில் பாஜக கூட்டணியின் சார்பில் களமிறங்கினார். கடந்த 26-ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலை யில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகின.25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது வீட்டில் வேலை செய்த 48 வயதான பெண்ணும் புகார் அளித்ததால் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இந் நிலையில் ரேவண்ணா மீது தற்போது இரண்டாவது எஃப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாச வீடியோக்கள் வெளியான அன்றே அவர் ஜெர்மனி சென்றதாக சொல்லப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசார ணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எனினும், அவர் இன்னும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் அறிவிக்கை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது தந்தை ஹெச்.டி. ரேவண்ணா மீது 2வது எஃப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *