1. வீட்டு வேலைக்காரப் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பெண்கள் பிரிஜ்வல் ரேவண்ணாவின் கோரப்பசிக்கு இரையாகி உள்ளனர். இவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தது யார்?
2.. இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரது மகனுக்கு காஷ்கன்ஞ் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது யார்?
3. பாலியல் வன்கொடுமைக் குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் மனைவிக்கு கட்சியின் முக்கிய பொறுப்பைக் கொடுத்தவர் யார்?
4 பில்கீஸ்பானு குற்றவாளிகள் வழக்கில் நேரடியாக குஜராத் சிறைத் துறைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் விடுதலைக்கு வித்திட்டவர் யார்?
இது எல்லாம் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து சென்ற ஆணையால் நடந்தது என்று ஊடங்களில் சான்றுகளோடு வந்த தகவல்கள்!
இவர் தான் ‘நாரி சக்தி’ (பெண்கள் சக்தி) ‘மாத்ரு வந்தனம்’ (பெண்களை வணங்குவோம்) ‘பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்’ (பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், படிக்கவையுங்கள்) என்று 10 ஆண்டுகளாக முழங்கிக் கொண்டு வந்தார்.
தெரிந்து கொள்வீர்!
‘நாரி சக்தி’ ‘மாத்ரு வந்தனம்’ என்ற பசப்புப் பேச்சின் அவலம்
Leave a comment