கழகத் தலைவர் இரங்கல்
தேவக்கோட்டையில் பகுத்தறிவாளர் கழகத்தின் அடிநாள் உறுப்பினரும், வருவாய்த்துறை அதிகாரியாக இருந்தவரும், சீரிய திராவிடர் இயக்கப் பற்றாளரும், திராவிடர் இயக்கப் பேச்சாளர் மறைந்த திருமதி கமலம் செல்லத்துரை அவர்களது வாழ்விணையருமான அருமை நண்பர் மானமிகு மு. செல்லத்துரை (வயது 92) நேற்று (3.5.2024) அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
தேவக்கோட்டை பகுதியில் டாக்டர் சுப்ரமணியம் குடும்பமும், நண்பர் கமலம் – செல்லத்துரை குடும்பமும் மற்ற தோழர்களுடன் – பேராசிரியர் இறையனார் வழிகாட்டல் ஊக்கத்தின் காரணமாக செய்த பிரச்சாரப் பணிகள் ஏராளம். குடும்பம் – பிள்ளைகள் உள்பட பகுத்தறிவு கொள்கையாளர்களானமைக்கு மறைந்த நண்பர் செல்லதுரையின் அடிக்கட்டுமானப் பணியே காரணமாகும்.
சென்ற டிசம்பர் மாதம் தேவக்கோட்டை டாக்டர் சுப்ரமணியம் இல்லத்திற்குச் சென்று அவசரமாகத் திரும்பும் நிலையில், செல்லத்துரை அவர்களின் மகன் தோழர் செழியன் சந்தித்தார். நலம் விசாரித்தார்.
மறைந்த செல்லத்துரையின் கொள்கைச் செல்வங்களான மகள் வெற்றிச்செல்வி, மகன்கள் இங்கர்சால், குமணன், செழியன், அருணன் ஆகியோருக்கும், கழகத்தவர்களுக்கும் ஆறுதல் கூறுவதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
4.5.2024
குறிப்பு: தலைமைக் கழகம் சார்பில் சாமி. திராவிடமணி மற்றும் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இறுதி நிகழ்வை நடத்துவர்.