தேவகோட்டை மு.செல்லத்துரை மறைவு கழகத்தின் சார்பில் மரியாதை

1 Min Read

தேவகோட்டை, மே 4- தேவ கோட்டை ப.க.மேனாள் துணைத் தலைவரும், தி.மு.க.மேனாள் மாநில மகளிரணி துணைத் தலைவர் மறைந்த கமலம் செல்லத்துரை அவர்க ளின் கணவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மு.செல்லத்துரை நேற்று (3.5.2024) இயற்கை எய்தினார்.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அன்னாருக்கு காரைக் குடி மாவட்ட கழகக் காப்பாளர் சாமி. திரா விடமணி தலைமையில் மாவட்ட தலைவர் ம.கு.வைகறை, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணை செய லாளர் இ.ப.பழனிவேலு, மாநில ப.க. துணைப் பொதுச் செயலாளர் மு.சு.கண்மணி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, தேவகோட்டை நகர தலை வர் வீர.முருகப்பன், ஒன் றிய ப.க.தலைவர் அ.அரவரசன், நகர ப.க. அமைப்பாளர் சிவ.தில் லைராசா, திருமணவயல் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை வைத்து மரியாதை செலுத் தினர். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுத்த இரங்கல் அறிக்கை அனை வருக்கும் வழங்கப்பட்டது.
மறைந்த செல்லத் துரை அவர்களின் மகள் வெற்றிச்செல்வி, மகன் கள் இங்கர்சால், கும ணன், செழியன், அரு ணன் மற்றும் குடும்பத்தி னருக்கு கழகத்தின் சார் பில் ஆறுதல் தெரிவித்து கழகத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட் டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *