உச்சநீதிமன்றம் அறிவிப்பு
புதுடில்லி, மே 4 மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் பிணை மனுவை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப் பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய் திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (3.5.2024) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அன்றைய தினத்தில் அமலாக்கத்துறை, கெஜ்ரிவால் தரப்பு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கெஜ்ரிவால் தரப்பில், மூத்த வழக்கு ரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வருகிறார்.