வாயால் சிரிக்க முடியுமா? கடவுள்களின் கதைகளைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

1 Min Read

– கருஞ்சட்டை –

பூரி ஜெகந்நாதர் சிலை
பூரி தேர்த் திருவிழா முடிந்த பிறகு, அந்தச் சாமி சிலைக்குக் காய்ச்சல் எதுவும் உள்ளதா என்று சோதித்து மருந்து, மாத்திரை கொடுக்க நியமிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள்.

அங்காள பரமேசுவரியைக் குளுமைப்படுத்தும் பக்தர்கள்!
கடுமையான வெயிலில் மேல்மலையனூர் கோவிலில் உள்ள கர்ப்பக் கிரகத்தில் அங்காள பரமேசுவரி தாங்கமாட்டார் என்பதற்காகக் கோவில் முழுவதும் பெரிய பெரிய அய்ஸ்கட்டிகளைக் கொட்டி கோவிலைக் குளுமைப்படுத்தும் பக்தர்கள்.

அழகருக்கு அசதியாம் – உடலைப் பிடித்துவிடும் பார்ப்பனர்கள்!
மதுரையில் சித்திரைத் திருவிழா முடிந்து அழகர் கோவிலுக்குத் திரும்பிய பிறகு அவருக்கு அசதியாக இருக்குமாம் – உடலைப் பிடித்துவிடும் பார்ப்பன அய்யங்கார்கள்!

இவற்றைப் படித்தால், கடுகளவு அறிவு உள்ளவர்களும் கைகொட்டி சிரிக்க மாட்டார்களா? நோய்களைத் தீர்ப்பார் கடவுள் என்று நம்பி விரதம் இருந்தும் கோவில் கோவிலாகத் தேடி அலைகிறார்கள்; நேர்த்திக் கடன் கழிக்கிறார்கள் பக்தர்கள். அந்தக் கோவில்களில் உள்ள கடவுள்களுக்கே டாக்டர்கள் வைத்தியம் பார்க்கிறார்களாம்! கடவுள் வெயில் தாங்கமாட்டார் என்று அய்ஸ் வைக்கிறார்களாம் – கடவுள் உடம்பை அய்யங்கார் பார்ப்பனர்கள் பிடித்து விடுகிறார்களாம்!
அய்யய்யோ, வாயால் சிரிக்க முடியவில்லையே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *