பாலியல் வன்முறையில் சிக்கிய தேவகவுடா பேரனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கருநாடக மாநில உள்துறை அமைச்சர் தகவல்

2 Min Read

பெங்களூரு, மே 3- ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக் கியுள்ள முன்னாள் பிரத மர் தேவகவுடாவின் பேர னும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது.
மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேர னும், ஹாசன் எம்பியுமான‌ பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகு தியில் பாஜக கூட்டணி யின் சார்பில் களமிறங்கி னார். கடந்த 26ஆ-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்க ளுடன் நெருக்கமாக இருக் கும் 3 ஆயிரம் ஆபாச காணொலிகள் வெளியா கின. ஹாசன் தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் இந்த காணொலிகள் அடங்கிய பென் டிரைவ் வீடு வீடாக விநியோகிக் கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் 25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலி யல் தொந்தரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது வீட்டில் வேலை செய்த 48 வயதான பெண் ணும் புகார் அளித்ததால் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. அக் குழுவின் தலைவர் பி.கே.சிங், விசாரணைக்கு ஆஜ ராகுமாறு நேற்றுமுன் தினம் பிரஜ்வல் ரேவண் ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா, தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் ஆஜராக 7 நாட் கள் கால அவகாசம் அளிக் குமாறு தன் வழக்குரைஞர் மூலம் கோரினார்.

இதனிடையே பிரஜ் வல் ரேவண்ணா வெளி நாடு தப்பியோடியதாக தகவல் வெளியானதால், முதலமைச்சர் சித்தரா மையா அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்கு மாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழு தினார்.
இந்நிலையில் கருநா டக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், “பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவ டிக்கை எடுப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித் ஷா, ஒக்கலிகா வாக்கு வங்கிக்காக தேர் தல் முடியும் வரை பிரஜ் வல் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என கூறு வது தவறானது.

சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் அவரை குற்றவாளி என அறிவித்துள்ளனர். லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி விமான நிலையங் களுக்கு தகவல் தெரிவிக் கப்ப‌ட்டுள்ளது” என்றார்.
பிரஜ்வல் ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில், ”நான் தற்போது பெங் களூருவில் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனது வழக்குரைஞர் மூலம் சிறப்பு புலனாய்வு குழு வினருக்கு தகவல் தெரிவித்து விட்டேன். வாய்மை விரைவில் வெல்லும்” என்று நேற்று முன்தினம் பதிவிட்டிருந்தார். இந் நிலையில், ஜெர்மனியில் உள்ள பிரஜ்வல் வரும் 15-ஆம் தேதி அங்கிருந்து கிளம்பி 16-ஆம் தேதி நள்ளிரவு பெங்களூரு கெம்பே கவுடா பன் னாட்டு விமான நிலையத் துக்கு வருகிறார். இதற் காக அவர் விமானப் பய ணத்துக்கான முன்பதிவு செய்து பயணச்சீட்டு எடுத்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *