தகிக்கும் கோடை: இப்படியும் ஒரு ஏற்பாடு!

viduthalai
1 Min Read

புதுடில்லி, மே 2-  ஃப்ரிட்ஜ் ஒன்றை இந்தியர் ஒருவர் ஏசியாக பயன் படுத்தி வருகிறார். இது தொடர் பான காட்சிப் பதிவு ஒன்று வெளி நாட்டினரை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.
இந்தியாவில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகி றது. வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் வெளியே நடமாடுவதை பெருமளவு தவிர்த் துள்ளனர்.
வீடுகளுக்குள் வெப்பத்தை தணிப்பதற்காக ஏசி, ஏர் கூலர் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத் தப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தள வில் ஜூன் மாதம் வரையில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை வெயில் காரணமாக பழக் கடைகள், ஜூஸ் கடைகள் உள் ளிட்டவற்றில் வர்த்தகம் சிறப்பாக நடைபெற்று வருவதாக வியா பாரிகள் கூறுகின்றனர்.
இப்படி கோடை வெப்பத்தை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை பொதுமக்கள் மேற்கொண்டுள்ள நிலையில், ஒருவர் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜை ஏசியாக பயன்படுத்தி யுள்ளார்.
அதாவது ஃப்ரிட்ஜை திறந்து வைத்து அதற்கு முன்னால் ஏர் கூலரை வைத்து அந்த நபர் நிம்ம தியாக படுத்துக் கொண்டிருக்கிறார். இதுதொடர்பான காட்சிப் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் கவ னம் பெற்று வருகிறது.
இந்த நபரை பாராட்டியும் விமர்சித்தும் கமென்டுகள் குவிந் துள்ளன. இந்த முறையை பயன் படுத்தினால் வெப்பம்தான் அதிக ரிக்கும் என்றும் குளிர்ச்சி ஏற்ப டாது எனவும் சிலர் கூறியுள்ளனர்.
ஒருவர் இயற்பியல் விதிப்படி இந்த முறை வெப்பத்தை தான் அறையில் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் சிலர் இப்படி திறந்து வைப்பதால் ஃப்ரிட்ஜ் பழுதடையும் என்று தெரிவித்துள்ளனர். சில நெட்டிசன்கள் உங்களிடம் இருப் பதை வைத்து சிறப்பான ஒரு பொருளை உருவாக்குங்கள், அதற்கு இவர் தான் ஓர் உதாரணம் என்று பாராட்டியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *