விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

1 Min Read

ஜெய்ப்பூர், நவ.21 ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக் குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிரச்சாரத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலை யில், காங்கிரஸ் கட்சி தனது தேர் தல் அறிக்கையை இன்று (21.11.2023) வெளியிட்டது.

இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலை வர் கோவிந்த் சிங் தோதசரா, சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கையில் “விவ சாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப் படும். சுவாமிநாதன் அறிக்கை யின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். காங்கிரஸ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதில் 4 லட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற் படுத்தப்படும்.

பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும்.

ராஜஸ்தானின் பொருளா தாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக் கும். இதனை 2030 ஆம் ஆண் டுக்குள் 30 லட்சம் கோடி ரூபா யாக உயர்த்துவதே இலக்கு” உள் ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பிடித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *