விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

Viduthalai
1 Min Read

ஜெய்ப்பூர், நவ.21 ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக் குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிரச்சாரத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலை யில், காங்கிரஸ் கட்சி தனது தேர் தல் அறிக்கையை இன்று (21.11.2023) வெளியிட்டது.

இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலை வர் கோவிந்த் சிங் தோதசரா, சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கையில் “விவ சாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப் படும். சுவாமிநாதன் அறிக்கை யின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். காங்கிரஸ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதில் 4 லட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற் படுத்தப்படும்.

பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும்.

ராஜஸ்தானின் பொருளா தாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக் கும். இதனை 2030 ஆம் ஆண் டுக்குள் 30 லட்சம் கோடி ரூபா யாக உயர்த்துவதே இலக்கு” உள் ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பிடித்துள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *