நிலவில் நீர், வாயு, மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு மயில்சாமி அண்ணாதுரை

1 Min Read

 பெங்களுரு, செப். 11 நிலவின் தென்துருவத்தில் நீர், வாயு, மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். 

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாநாடு ஒன்று நடந்தது. இந்த மாநாட்டை  இஸ்ரோ ஆறிவியல் ஆய்வாளர் மயில்சாமி அண்ணாதுரை   தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:- 

இஸ்ரோ நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. நிலவில் தற்போது இரவு ஏற்பட்டு இருப்பதால் பிரக்யான் ரோவர் ஆய்வுப் பணியை முடித்து தூக்க நிலைக்கு சென்றுள்ளது. நிலவில் பகல் வரும்போது மீண்டும் அது ஆய்வுப் பணியை தொடங்கும். பிரக்யான் ரோவரின் ஆய்வுக்குப் பிறகு நிலவின் தென்துருவத்தில் உள்ள கனிமங்கள் குறித்து நமக்கு கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. நீர், வாயு மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் நிலவில் உள்ள கனிமங்கள் குறித்த முழு விவரங்கள் நமக்கு கிடைக்கும். அதன்பிறகு மனிதன் வாழ உகந்த இடமாக நிலவு இருக்குமா என்பது குறித்து தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.  பின்னர், தனியார் பல்கலைக்கழக மாணவர்களுடன் மயில்சாமி அண்ணாதுரை கலந் துரையாடினார். மாணவ-மாணவிகள் விண்வெளி குறித்து கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *