ராஜஸ்தான் : நீட் தேர்வுக்கு இன்னொரு மாணவர் பலி

2 Min Read

கோட்டா, மே 2- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஒரு மாணவ்ர் நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வரும் மாண வர்கள் தனியார் பயிற்சி மய்யங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற் கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கெனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை, நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியானாவைச் சேர்ந்த சுமித் பஞ்சால் என்ற 20 வயது மாணவர், தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். நேற்று (1.5.2024) கோட்டா நகரில் தங்கி படித்து வந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத் தைச் சேர்ந்த பாரத் குமார் ராஜ்புட் என்ற 20 வயது மாணவர், கோட்டாவில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியில் தங்கி, கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

ஏற்கெனவே 2 முறை நீட் தேர்வு எழு தியுள்ள பாரத் குமார், 3ஆ-வது முறையாக வரும் மே 5ஆம் தேதி நீட் தேர்வு எழுத இருந்தார். பாரத் குமாருடன் அவரது உறவினர் ரோகித் என்பவரும் தங்கியி ருந்து நீட் தேர்வுக்காக படித்து வந்துள் ளார். நேற்று காலை 10.30 மணியளவில் ரோகித் வெளியே சென்றிருந்த சமயத்தில், அறையில் தனியாக இருந்த பாரத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சுமார் 11.15 மணியளவில் ரோகித் தனது அறைக்கு திரும்பி வந்து பார்த்த போது, பாரத் குமார் தூக்கில் தொங்கி யதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து பாரத் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வ தற்கு முன்பாக பாரத் குமார் தனது தந் தைக்கு எழுதிய உருக்கமான கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், “மன்னித்துவிடுங்கள் அப்பா, என்னால் இந்த முறையும் வெற்றி பெற முடியாது” என்று எழுதப்பட்டிருந்த தாக காவல் துறையினர் தெரிவித்துள் ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை கோட்டா நகரில் பயிற்சி பெற்று வந்த 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். மேலும் கடந்த 2023-ஆம் ஆண்டில் கோட்டா நகரில் பயின்று வந்த 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க கோட்டாவில் உள்ள பயிற்சி மய்யங்களுக்கு ராஜஸ்தான் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள போதிலும் இந்நிகழ்வுகள் தொடர்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *