திண்டுக்கல், ஏப். 30- நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவ ராகவும் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளராகவும் பெரியாரின் போர்ப்படைத் தளகர்த்தகர்களில் ஒருவராக ஆரம்ப கால கட்டங் களில் திகழ்ந்தவருமான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார் பிறந்த திண்டுக்கல் பட்டிவீரன் பட்டியில் வருகின்ற 2.5.2024இல் மாபெரும் பொதுக் கூட்டத்தினை மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை ஏற் பாடு செய்துள்ளார்.
ஊ.பு. அ.சவுந்தரபாண்டியனார் அவர்கள் 1920ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்டமன்றத் துக்கு நீதிக்கட் சித் தலைவர் பி. டி. ராஜனின் பரிந்துரையால் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1937 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். நீதிக்கட்சியில் பெரியா ரின் தீவிர ஆதரவாளர்களுள் ஒரு வராக இருந்தார்.
நாடார் சமூக மக்களிடையே சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பவும், சுயமரி யாதைத் திருமணங்களைப் பிர பலப் படுத்தவும் உறுதுணையாக இருந்தார்.
1937–1940இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு நிதியுதவி செய்தும் நீதிக்கட்சியின் சார்பில் கலந்துகொண்டவர் சென்னை தியாகராயர் நகரின் பாண்டி பசார் இவரது நினை வாகப் பெயரிடபட்டதே ஆகும்.
1928–1930 ராமனாதாபுரம் ஜில்லா நியமன ஆட்சியராக இருந்த காலத்தில் பேருந்துகளில் தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று எழுதப்பட்டி ருந்த பேருந்துகளின் உரிமத்தினை ரத்து செய்தார். பின்னர் பேருந்து உரிமையாளர்கள் மன்னிப்பு கேட்டு அனைத்து தரப்பு மக்களை யும் பேருந்துகளில் பாகுபாடின்றி ஏற்ற வைத்தவர் சவுந்தரபாண்டி யனார் ஆவார்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங் கியை ஆரம்பித்த தளகர்த்கர்களுள் இவரும் ஒருவராக இருந்தார். 1933ஆம் ஆண்டில் இந்தியன் சர்க்கார் லைப் ஆயுள் காப்பீட்டு கழகத்தினை ஆரம்பித்து அந்நிறு வனத்தின் 5 இயக்குநர்களில் ஒரு வராகவும் திகழ்ந்தார். பின்னர் இந்நிறுவனம் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தோடு (Life Insurance Corporation of India) இணைக்கப்பட்டது
1947ஆம் ஆண்டில் மதுரை சர் பி.டி.ராசனோடு இணைந்து மதுரை, திண்டுக்கல் நெடுஞ்சாலை யில் மதுரை சர்க்கரை ஆலை (Madurai Sugar Factory)யைத் தொடங் கினார். எனவே அந்த ஆலையை ஒட்டி உருவான புதிய ஊருக்கு சவுந்திரபாண்டியன், பி.டி.இராசன் ஆகிய இருவரின் பெயரையும் இணைத்து பாண்டியராஜபுரம் என தமிழ்செம்மல் கி. ஆ. பெ. விசுவநாதம் பெயர் சூட்டினார்.
இவ்வகையில் பெருமைக்குரி யவரான சவுந்தரபாண்டியனார் பிறந்த வரலாற்று சிறப்பு மிக்க திண்டுக்கல் மாவட்ட பட்டிவீரன் பட்டியில் திராவிடர் இயக்க நூற் றாண்டு பொதுக்கூட்டம் வரு கின்ற 2.5.2024 அன்று மாலை நிலக்கோட்டை ஒன்றியச் செயலா ளர் இரா.ஜெயபிரகாஸ் தலைமை யிலும், வரவேற்புரை இரா.சக்தி சரவணன் மற்றும் முன்னிலை தலைமை கழக அமைப்பாளர் வீர பாண்டி, மு.நாகராசன், தி.க.செல் வம் தி.மு.க பேரூர் கழக செயலாளர் அருண்குமார், சவுந்தரபாண்டி யனார் அவர்களின் குடும்பத்திலிருந்திருந்து. சுரேஷ்குமாரும், முன்னிலை வகிக்க
தொடக்க உரை திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கே.ஆர். காஞ்சித்துரையும்,
இளைஞர்களே திராவிடர்கழக செயல்பாடுகள் பாரீர் என்ற தலைப்பில் மாவட்ட கழக தலை வர் வழக்குரைஞர். மு. ஆனந்த முனிராசனும்,
சிறப்புரையாக தஞ்சை பெரியார் செல்வனும், எழுச்சி உரை ஆற்ற இருக்கிறார்கள் இந் நிகழ்வில் திராவிடர் கழக முன் னோடிகளும், இந்தியா கூட்டனி அனைத்து கட்சி தோழர்களும் கலந்து கொள்கிறார்கள் நன்றி யுரை தமிழரசு (மாணவர் கழக அமைப்பாளர்).