புதுச்சேரியில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

Viduthalai
1 Min Read

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் 134-ஆவது பிறந்த நாளில் புதுச்சேரி மாவட்ட கழகம் சார்பில் 29.4.2024 காலை 10 மணியளவில் புதுச்சேரி சட்டமன்றம் எதிரில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் சிலைக்கு கழக மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் மாலை மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் கி.அறிவழகன், துணைத் தலைவர் மு.குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், புதுச்சேரி நகராட்சி வடக்குப் பகுதித் தலைவர் மு.ஆறுமுகம், செயலாளர் களஞ்சியம் வெங்கடேசன், உழவர்கரை நகராட்சித் தலைவர் சு.துளசிராமன், செயலாளர் கா.நா.முத்துவேல் அரியாங்குப்பம் கொம்யூன் தலைவர் செ.இளங்கோவன், பெ.ஆதிநாராயணன், கலைமாமணி கோ. பாரதி, காங்கேயன், அசோக. சுப்பரமணியன், சவுந்தரராஜன் ,ச. சாக்ரடீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *