‘இவாள்’ பொய்யைவிடவா?
சீடன்: ‘தினமலர் அந்துமணி பதில்கள்’ பகுதியில் ஒரு கேள்வி பதில் வந்திருக்கிறது குருஜி!
குரு: என்ன அந்த கேள்வி பதில் சீடா?
சீடன்: என் நண்பன் நிறைய பொய் பேசுகிறான், அவனை திருத்துவது எப்படி? என்ற கேள்விக்கு, அந்துமணியின் பதில் ‘‘அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்தச் சொல்லுங்கள். ஏனெனில் அரசியல் பொது மேடை பேச்சுகளில் தான் ஏராளமான பொய்கள் உற்பத்தி ஆகின்றன” என்று ‘தினமலர்’ கூறி இருக்கிறது, குருஜி!
குரு: ‘‘கடவுளை கும்பிட்டால் பரீட்சையில் அதிக மார்க் வாங்கலாம், பாஸ் ஆகலாம்” என்ற பொய்யை விடவா, சீடா?