கருநாடகாவை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு! முதலமைச்சர் சட்டமன்றத்திற்கு வெளியே போராட்டம்

1 Min Read

பெங்களூரு, ஏப். 29- கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அம் மாநிலச் சட்டமன்றத்திற்கு வெளியே மறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு கருநாடகாவில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக கருநாடக அரசு அறிவித்தது.

வறட்சியால், பயிர்கள் சேதமடைந் தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18 ஆயிரத்து 171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு கருநாடக அரசு கோரிக்கை விடுத்தது.

கருநாடக அரசுக்கு வறட்சி, நிவாரணப் பணிக்காக ஒன்றிய அரசு 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் இது கருநாடக அரசு விடுத்த கோரிக்கை தொகையை விட மிகக் குறைவாகும்.

எனவே வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு அநீதி இழைத்துள்ளதாகக் கூறி கருநாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற் றும் அமைச்சர்கள் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைவரும் கருநாடக சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே திரண்டு கையில் சொம்பு ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிராகத் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி கருநாடகாவில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *