பாலியல் வன்கொடுமை குற்றவாளியும் தேவேகவுடாவின் பேரனுமான எம்.பி.தேவண்ணா ஜெர்மன் தப்பி ஓடியது உறுதி செய்யப்பட்டது

Viduthalai
1 Min Read

பெங்களூரு, ஏப். 29- மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி பாஜ.க. கூட்டணியின் நாடா ளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரேவண்ணா நேற்று (28.4.2024) அதிகாலை 3.35 மணிக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் பெங்களூருவில் இருந்து பிராங்பர்ட்டுக்கு புறப்பட்டார்.
அவர் ஜெர்மனி வழியாக அய்ரோப் பாவில் உள்ள வேறு நகரம் ஒன்றில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது*~
மேனாள் பிரதமரின் பேரனும், ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினருமான ரேவண்ணாவின் பெண் கள் சம்பந்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச காட்சிகள் வைர லாகி வருகின்றன.

பல காட்சிப் பதிவு களில் அனைத்து வயது பெண்களையும் பலவந்தமாக உடல்ரீதியான பாலியல் அத்துமீறல் செய்யும் பதிவுகள் இருப்ப தாக ஆதாரங்கள் கூறுகின்றன. இது போன்ற 200க்கும் மேற்பட்ட திகி லூட்டும் பதிவுகள் கருநாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப் படுகிறது. வீட்டுப் பணிப்பெண்கள் முதல் உயர்நிலைப் பெண்கள் வரை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்யும் பதிவுகள்உள்ளன. இந்த பதிவைப் பார்க்கும்போது இதை யெல்லாம் ரேவண்ணாவே பதிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
கருநாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு இது சம்பந்தமாக விசாரணையைத் தொடங்கியுள்ளது, ஆனால் அதற்கு முன்பே ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றார்.
அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து இந்த வழக்கின் விசாரணையை முடிக்க சிறப்புக் காவல்துறை முடிவு செய்துள்ளது இதனால் பன்னாட்டுக் காவல்துறை உதவியையும் நாடி உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *