இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது உங்கள் வாக்கின் வலிமையை உணர்ந்து மே 25 அன்று சர்வாதிகாரத்தை அகற்றி ஜன நாயகத்தை காக்க நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும்!

Viduthalai
3 Min Read

இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகக் களமிறங்கிய கெஜ்ரிவாலின் மனைவி!

புதுடில்லி, ஏப்.29 இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது; உங்கள் வாக் கின் வலிமையை உணர்ந்து மே 25 அன்று சர்வாதி காரத்தை அகற்றி ஜன நாயகத்தை காக்க நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா.
டில்லியில் ஆட்சியை கவிழ்க்கவும், மக்களவை தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதை தடுக்கவும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21 அன்று அமலாக்கத்துறை (மதுபான கொள்கை வழக்கு) மூலம் கைது செய்து சிறையில் அடைத்தது மோடி அரசு. தற்போது கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்தபடியே டில்லி மாநில நிர்வாகத்தை கவனித்து வருகிறார். கெஜ்ரிவால் சிறையில் வைக்கப்பட்டுள்ளதால் இனி சுதந்திரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு 7 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி விடலாம் என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் கனவு கண்டனர். இந்நிலையில், பாஜகவினரின் கனவை கெஜ்ரிவாலின் மனைவி பொய்க்கியுள்ளார்.
ஏற்கெனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடை பெற்ற “இந்தியா” கூட்டணி பிரச்சார பேரணியில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கலந்து கொண்ட நிலையில், தற்போது டில்லியில் முழுநேர பிரச்சாரத் திற்கு கெஜ்ரிவால் மனைவி சுனிதா களமிறங்கி யுள்ளார்.
டில்லியில் உள்ள 7 மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் கள மிறங்கியுள்ளது. இந்த 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 25 அன்று (6ஆவது கட்டத்தில்) வாக்குப்பதிவு நடைபெற வுள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான பிரச்சா ரத்தை கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா 27-4-2024 அன்று கிழக்கு டில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கோண்ட்லி பகுதியில் தொடங்கினார்.

சுனிதாவின் பிரச்சாரம் சாதாரண வாக்குச் சேகரிப்பு பயணம் என்றே ஆம் ஆத்மி கூறிய நிலையில், இந்தப் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் பிரம்மாண்ட ஆதரவு வழங்கி வருவதால் அது பேரணியாக மாறிவிட்டது. இதுபோக டில்லியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சியினரும் சுனிதாவிற்கு பக்க பலமாக உடன் செல்வதால் டில்லி முழுவதும் “இந்தியா” கூட் டணிக்கு ஆதரவு அலை தற்போதே தீவிரமெடுத் துள்ளது. தங்களது வியூக கனவுகள் அனைத்தும் கானல் நீரைப் போன்று காணாமல் போகும் நிலையில், டில்லியில் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் பாஜகவினர் புலம்பிவருகின்றனர்.

பாவம்… இதைத் தவிர பாஜகவிற்கு
என்ன தெரியும்?
டில்லியில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவின் பிரச்சாரத்தால் “இந் தியா” கூட்டணிக்கான ஆதரவு பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில், டில்லி காங் கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லியை பண பலம் மற்றும் மிரட்டல் மூலம் தங்கள் பக்கம் வளைத்தது பாஜக. ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்ததால் நான் கட்சியை விட்டு விலகுவதாக அரவிந்த் சிங் லவ்லி சாக்குபோக்கு சொல்லி பாஜக கூடாரத்தில் பதுங்கியுள்ளார். எதிர்க்கட்சியினரை வளைக்கும் திட்டத்தை தவிர பாஜகவிற்கு வேறு என்ன தெரியும்?
இதற்கு என்ன சொல்லப் போகிறது பாஜக?
‘‘கெஜ்ரிவாலின் மனைவி வீட்டை விட்டு வெளியே வந்ததை நாங்கள் பார்த்ததில்லை. அவர் அரசியல் பிரச்சாரத்தில் என்ன செய்ய போகிறார்? அவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? மைக் பிடிக்க தெரியுமா?” என்றெல்லாம் சுனிதாவை கிண்டல் செய்தனர். ஆனால், தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் சுனிதா பாஜகவை பந்தாடியுள்ளார்.

பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:
“டில்லி முதலமைச்சரும், எனது கணவருமான கெஜ்ரிவால் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எந்த நீதிமன்ற மும் அவரை குற்றவாளி என அறிவிக்கவில்லை. விசாரணை மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. விசாரணை 10 ஆண்டுகளுக்கு நடை பெற் றால் அவர் பத்தாண்டுகளும் சிறையில் அடைக்கப் பட்டு இருக்க வேண்டுமா? முன்பு நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தால் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு புதிய முறையை இப்போது கொண்டு வந்திருக்கிறார்கள். இது சர்வாதிகாரம்.
கெஜ்ரிவாலுக்கு 22 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. 12 ஆண்டுகளாக இன்சுலின் எடுத் துக் கொண்டு வருகிறார். சிறையில் அவருக்கு இன்சுலின் மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கெஜ்ரி வாலை கொல்ல வேண்டும் என நினைக்கிறார்களா? இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உங்கள் வாக்கின் வலிமையை உணர்ந்து மே 25 அன்று சர்வாதிகாரத்தை அகற்றி ஜன நாயகத்தை காக்க நாம் அனைவரும் வாக் களிக்க வேண்டும். நாம் ஒன்றாக போராடி இதில் வெற்றி பெறுவோம்” என பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *