புதுடில்லி, ஏப். 28 – பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு விசாரணையை 29.4.2024 அன்று டில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடிக்கு எதிராக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஆனந்த் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். உத் தரப்பிரதேச மாநிலம் பிலிபித் தொகுதியில் கடந்த 9-ஆம் தேதி நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, மத ரீதியில் வெறுப்பு பேச்சில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மதத்தை குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பது தேர்தல் விதிமீறல் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடைவிதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப் பட்டிருந்தது. இந் நிலையில், இந்த வழக்கு டில்லி உயர்நீதி மன்றத்தில் நேற்று (26.4.2024) விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், மோடிக்கு எதிரான வழக்கை நாளை திங்கட் கிழமைக்கு (29.4.2024) உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி திடீரென்று ஊபா தொடர்பான தீர்ப்பாய விசார ணைக்குச் சென்றதால் வழக்கு ஒத்திவைக் கப்பட்டுள்ளது.
கோடை வெயில்
ஆவின் பால் பொருள் உற்பத்தி
20 விழுக்காடு அதிகரிப்பு
சென்னை, ஏப்.28 கோடையை சமாளிப்பதற்காக மோர், தயிர், லஸ்ஸி உள்ளிட்ட பால் பொருட்களின் உற்பத் தியை, 20 சதவீத அளவிற்கு ஆவின் அதிகரித்து உள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி, வெண்ணெய், நெய், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 280க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை, ஆவின் பாலகங்கள் மட்டுமின்றி, தனியார் கடைகளிலும், சூப்பர் மார்க் கெட்டுகளிலும், தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது. பால் பொருட்கள் விற்பனை வாயிலாக ஆவினுக்கு மாதந்தோறும், 60 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது.
மோர், பழரசம், லஸ்ஸி உள்ளிட்ட நீராகாரங்களுக்கான தேவை அதிகரித் துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆவினில், தயிர், மோர், லஸ்ஸி, சாக்லோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, சாக்லோ லஸ்ஸி, மில்க் ஷேக், யோகர்ட் உள்ளிட் டவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் கூறியதாவது: கோடைக்காலத்தில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை அதிகரிப்பது வழக்கம். நடப்பாண்டு வெப்பம் காரணமாக, குளிர்ச்சியான ஆவின் பொருட்களை மக்கள் நாடிச் செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டு பால் பொருட்களின் உற்பத்தி, 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் குல்பி வகைகள், ஐஸ்கிரீம் வகைகள் முழுவீச்சில் உற்பத்தி செய்யப்பட்டு, உடனுக்குடன் பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சென் னையில் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துஉள்ளது. பொருட்கள் தட்டுப் பாடின்றி கிடைப்பதற்கு, அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.