சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை விரட்டியதால் கருநாடக மக்களை மோடி பழிவாங்குகிறார் காங்கிரஸ் குற்றச்சாட்டு

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஏப். 28 கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் தீர்மான மாக நிராகரிக்கப்பட்டதால், கரு நாடக மக்களை பிரதமர் மோடி பழிவாங்கும் எண்ணத்தில் உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் தொடர்ச்சியாக, கடுமையான வறட்சிக்கு நிவாரணம் கோரிய கருநாடக அரசுக்கு ரூ.3,499 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்திருக்கும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டு கவனம் பெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2023ஆ-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தீர்க்கமாக நிராகரிக்கப்பட்டதில் இருந்து மோடி தனது பழிவாங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
முதலாவதாக, அன்ன பாக்கியா உணவு பாதுகாப்பு திட்டத்தை நாசம் செய்ய முயற்சி செய்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி அதற்கெல்லாம் அசராமல், 4.49 கோடி பயனா ளர்களின் கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்தும் திட்டத்தை தொடங்கியது. இரண்டாவதாக, அவர் கருநாடகாவுக்கான நிதிகளை நிறுத்தினார். அவர் தோல்வியடைந்த ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரை கருநாடகாவுக்கான ஒன்றிய அரசின் நிதி 23 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மானியங்கள் 56 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, மாநிலத்தின் விவசாயிகளுக்கு முறையாக வழங்க வேண்டிய வறட்சி நிவாரண நிதியை தாமதப்படுத்துகிறது. கருநாடகாவின் 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சியை சந்தித்துள்ளது, அதில் 196 தாலுகாக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்திலேயே வறட்சி நிவாரண நிதியாக ரூ.18,172 கோடி வழங்கக் கோரி கருநாடகா அரசு, ஒன்றியத்தில் ஆளும் மோடி அரசை அணுகியது. ஆனாலும், அது மாதக் கணக்காக தாமதம் செய்யப்பட்டது. வறட்சி நிவாரணம் வழங்கத் தவறிய தற்காக மோடி அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கர்நாடகா அரசு தொடர்ந்த நிலையில், இறுதியாக ஒன்றிய நிதியமைச்சகம் கருநாடகா விவசாயிகளுக்கு ரூ.3,499 கோடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஒன்றிய அரசு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,499 கோடி வழங்க ஒப்புதல் அளித்து ரூ.3,454 கோடியை முதலில் வழங்கியுள் ளதாக கருநாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். மீத முள்ள தொகையை விரைவில் விடு விக்க வேண்டும் என்று அவர் வலி யுறுத்தினார். மேலும், ஒன்றிய அரசை எச்சரித்து மாநிலத்துக்கு ஓரளவு வறட்சி நிவராண நிதி அளிக்கச் செய்ததற்காக உச்ச நீதிமன்றத்துக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *