பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் தொடங்கியது. தஞ்சை வல்லம் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அய்ன்ஸ்டீன் அரங்கில் 28.04.2024 இன்று காலை 11 மணி அளவில் பழகு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பழகு முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் புதுவை சிவ. வீரமணி, ச. பிரின்சு என்னாரெசு பெரியார், கல்வியியல் துறை முதுநிலை துணைப் பேராசிரியர் முனைவர் செ. அனுசுயா பிரியா, கட்டடக்கலைத்துறை துணைப் பேராசிரியர் லதா, கட்டட எழில் கலைத்துறை துணை பேராசிரியர் சித்ரா, வேதியியல் துறை இணை பேராசிரியர் முனைவர் மனோகரன், வணிகவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் சுபேந்திரன், உயிரி தொழில்நுட்ப பொறியியல் துறை பேராசிரியர் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி துறையின் இயக்குநர் முனைவர் எஸ்.குமரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு தழுவிய அளவில் இருபால் மாணவர்கள் 75 பேர் கலந்து கொண்டனர். முதல் வகுப்பை முனைவர் எஸ்.குமரன் நடத்தினார்.
உற்சாகத்துடன் தொடங்கியது ‘பெரியார் பிஞ்சு’ பழகு முகாம் 2024
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books