தோதல் விதிமுறைகளை மீறிய அனுராக் தாக்குர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப். 28- தேர்தல் விதிமுறைகளை மீறி ஒன் றிய அமைச்சர் அனுராக் தாக்குர் பேசி வருவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் நேற்று (27.4.2024) புகாரளித்தது.

இமாச்சல பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் தேர்தல் பிரசாரம் மேற் கொண்ட அனுராக் தாக் குர், ‘உங்கள் குழந்தை களின் வளங்களை இஸ் லாமியர்களுக்கு வழங்குவது, நாட்டின் அணு ஆயுதங்களை அழிப்பது, நாட்டை ஜாதி, மத ரீதி யாக பிரிப்பது போன்ற திட்டங்களை காங்கிரஸ் மூலமாக செயல்படுத்த வெளி நாட்டவர் முயல் கின்றனர். பிளவை ஏற் படுத்தும் கூட்டம் காங்கி ரஸை மொத்தமாக ஆக் கிரமித்துள்ளது. எனவே ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற ஒருமித்த சிந்தனைகொண்ட பிரத மர் மோடிக்கு வாக்களிப் பதா அல்லது பிரிவினை யைத் தூண்டும் காங்கி ரசுக்கு வாக்களிப்பதா என நீங்கள் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.

அனுராக் தாக்குரின் இத்தகைய பேச்சு தேர் தல் விதிமுறைகளை மீறி இருப்பதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணை யத்தில் சனிக்கிழமை ‘27.4.2024) புகாரளிக்கப் பட்டது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செய லர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகி யோரின் பாணியில் ஒன் றிய அமைச்சர் அனுராக் தாக்குரும் தரமற்ற வார்த் தைகளை பேசியுள்ளார். அவரின் பேச்சு ஒழுக்கம் மற்றும் உண்மை நெறி களை மீறியுள்ளது. இதை தேர்தல் ஆணையம் கவ னத்தில்கொண்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யெனில் இதுபோல் தவறிழைப்பவர்களை பொதுவெளியில் நேர டியாக அம்பலப்படுத்து வோம்’ என குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *