பெங்களுரு, ஏப். 27- கருநாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் பாஜக வேட்பாளரும் மேனாள் அமைச்சருமான சுதாகர் வாக்கா ளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கிலுக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேர்தல் அதி காரிகள் சுதாகரின் பண்ணை வீட் டில் சோதனை நடத்திய போது, ரூ.4.8 கோடி ரொக்கம் சிக்கியது. மேலும் சுதாகர் மீது மதநாயக்க ஹள்ளி காவல் துறையினர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து வருமான வரித் துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட தாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கில் தெரிவித்தார்.
இதனிடையே பெங்களூரு தெற்கு தொகுதியின் பாஜக வேட் பாளர் தேஜஸ்வி சூர்யா நேற்று (26.4.2024) தனது எக்ஸ் பக்கத்தில் வாக்காளர்களிடம் வாக்கு கேட் கும் விதமாக காட்சிப் பதிவை வெளியிட்டார்.
அந்த காட்சிப் பதிவு மத ரீதியாக தூண்டிவிட்டு, வாக்கு களை அறுவடை செய்யும் விதமாக இருப்பதாக காங்கிரஸ் வேட் பாளர் சவும்யா ரெட்டி புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் தேர்தல் ஆணையம் தேஜஸ்வி சூர்யா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் அந்த சர்ச்சைக்குரிய காட்சிப் பதிவை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.