பி.ஜே.பி. நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையதாக கூறப்படும் ரூ. 4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு சி.பி.சி.அய்.டி.க்கு மாற்றம்

Viduthalai
2 Min Read

சென்னை, ஏப். 27- சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை, சிபிசி அய்டிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த ஏப். 6ஆ-ம் தேதி புறப்பட்டுச் சென்ற நெல்லை விரைவு ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
இதில் எஸ் 7 பெட்டியில் சென்னை கொளத்தூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட் டம் சிறீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேர் பயணம் செய்தனர்.
இவர்கள் திருநெல்வேலி மக் களவைத் தொகுதியில் போட்டி யிடும் பாஜக வேட்பாளர் நயி னார் நாகேந்திரனின் ஆதரவா ளர்கள் என்பது தெரியவந்தது.

அப்போது அவர்கள் வைத் திருந்த 6 பைகளை பறக்கும்படையினர் சோதனையிட்டனர்.
அதில் முறையான ஆவண மின்றி சுமார் ரூ.4 கோடி ரொக் கம் (ரூ.3 கோடியே 98 லட்சத்து 91,500) இருந்தது தெரியவந்தது.
இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசா ரணையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர் தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படு கிறது.
அதன்பின்னர், அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான (உணவு) விடுதி, சாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகை யில் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி சென்னையைச் சேர்ந்த கோவர்த்தனன் உட்பட 8 பேருக்கு தாம்பரம் மாநகர காவல் துறை அழைப்பாணை அனுப்பியது.
ஆனால், விசாரணையில் ஆஜராவதற்கு 10 நாட்கள் அவகாசம் தரும்படி நயினார் நாகேந்திரன் கடந்த 22ஆ-ம் தேதி கோரினார்.
இதற்கிடையே இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஅய்டிக்கு மாற்றும்படி தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையர் அமல் ராஜ், தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக் குநர் சங்கர் ஜிவாலுக்கு பரிந் துரை செய்தார்.
இதையடுத்து அந்த பரிந் துரையை ஏற்ற காவல்துறை தலைமை இயக்குநர், இந்த வழக் கின் விசாரணையை சிபிசிஅய்டிக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்கு தொடர் புடைய அனைத்து ஆவணங்க ளையும் தாம்பரம் மாநகர காவல்துறையிடமிருந்து ஓரிரு நாட்களில் சிபிசிஅய்டி காவல் துறை பெற்றுக்கொள்வார்கள் எனத் தெரிகிறது. அதன்பின் சிபிசிஅய்டி விசாரணையை தொடங்கும். இவ்வாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்துக் கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந் திரன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத் தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *