தனது தவறை மறைக்க ரயில்வே ஓட்டுநர்கள் மீது பழிபோட்ட ஒன்றிய அமைச்சர் இறந்துபோன ஓட்டுநர்களின் குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் பணி மறுப்பு!

2 Min Read

விசாகப்பட்டிணம், ஏப். 27- ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்தில் ஓட்டுநர் உட்பட 17 பேர் மரணமடைந்தனர். இந்த விபத்து ரயில் ஓட்டுநர்கள் கிரிக்கெட் போட்டி பார்த்ததால் ஏற்பட்டது என்று ரயில்வே அமைச்சர் கொடுத்த அறிக்கை யால் இறந்துபோன ரயில்வே ஊழியர் குடுபத்தினருக்கு கருணை அடிப்படை யில் பணி கிடைப்பது தடை ஏற்பட் டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தில் ரயிலின் பைலட் மற்றும் துணை பைலட் உள் ளிட்ட 17 பேர் மரணமடைந்தனர்.

இந்த ரயில் விபத்திற்கு பைலட் மற்றும் துணை பைலட் இருவரும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டே கவனக்குறைவாக ரயில் ஓட்டியது தான் என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா கூறியிருந்தார்.
இந்த நிலையில் விபத்தில் மரண மடைந்த அந்த இருவர் உள்ளிட்ட பிற ரயில்வே ஊழியர்களின் மொபைல் அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டா ஆகியவற்றை ஆய்வு செய்த தில் அவர்கள் கிரிக்கெட் விளை யாட்டை பார்க்கவில்லை என்று ரயில்வே துறை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பைலட் மற்றும் துணை பைலட் மீது ரயில்வே அமைச்சர் கூறிய ஆதார மற்ற குற்றச்சாட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு கருணை அடிப் படையில் வேலை கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

ரயில்வே கடந்த ஆண்டு வரலாற் றிலேயே மிகவும் மோசமான விபத்தை சந்தித்துள்ளது. இந்த விபத்துகளுக்கு காரணம் ரயில்வேத் துறையில் மோச மான பராமரிப்பு மற்றும் ஆட்கள் பற்றாக்குறை போன்றவை காரணமாக கூறப்பட்டது.
ஜூன் 2 ஆம் தேதி ஒரிசாவில் நடந்த விபத்திற்குப் பிறகு பல இடங்களில் ரயில் விபத்து ஏற்பட்டதால் ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்னவ் ரயில்வே ஊழியர்கள் மீது பழி போட துவங்கிவிட்டார்.
அப்படி அவர் தான் அமைச்சராக இருக்கும் துறையில் ஏற்பட்ட குறை பாட்டை மறைக்க ரயில் வே ஊழியர்கள் மீது பழியைப் போட்டார். தற்போது இவரது உண்மைக்குப் புறம்பான அறிக்கையால் கருண அடிப்படையில் பணி மறுக்கப்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *