27.4.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத் சபர்கந்தா மக்களவைத் தொகுதி ஷினாவாட் கிராமம் முழுவதும், பாஜகவினர் வரக்கூடாது என சத்திரி யர் சமூகத்தினர் பதாகைகள் வைத்துள்ளதால், பரபரப்பு. அத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஷோப்னா பாரையாவிற்கு பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வாக்கு ஒப்புகை சீட்டு வழக்கு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இந்தியா கூட்டணிக்கு முகத்தில் விட்ட அறை என பிரதமர் மோடி பேச்சு. தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்தது தான் உச்ச நீதிமன்றம் பாஜகவிற்கு முகத்தில் விட்ட அறை என காங்கிரஸ் பதிலடி – ஒப்புகைச் சீட்டினை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தொடரும் என்றும் பேச்சு.
* அயோத்தி ராமர் கோயில் காட்சிப் பதிவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்னர், நடத்தை விதிகளை மீறியதற்காக பாஜகவின் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மீது மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்டதற்கு தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு.
தி டெலிகிராப்:
* ராஜஸ்தானில் மதப்பிரச்சினையை உருவாக்கும் விதத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு, அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்பது, அது ஒரு உதவியற்ற பொம்மை என காட்டுவதாக மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கண்டனம்.
– குடந்தை கருணா