கொளுத்தும் வெயிலிலும் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் 71.69 விழுக்காடு வாக்குகள் பதிவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், ஏப்.27- நாடு முழுவ தும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி முதற் கட்டமாக கடந்த 19-ஆம் தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப் பட்டது. இதில் தமிழ்நாடு, புதுச் சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும்.
2-ஆவது கட்டமாக 88 நாடாளு மன்ற தொகுதிகளுக்கு நேற்று (26.4.2024) தேர்தல் நடந்தது. இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதி களுக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடை பெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர் கள் ஆர்வமுடன் ஓட்டுப் போட்டனர்.
அதேபோல் அரசியல் கட்சி தலை வர்கள், வேட்பாளர்கள், அமைச் சர்கள், திரைக் கலைஞர்கள் ஆகி யோர் ஆர்வமுடன் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு சென்று வாக் களித்தனர். முதியவர்களும், முதல் தலைமுறை வாக்காளர்களும் ஆர்வ முடன் வந்து வாக்களித்ததை காண முடிந்தது. கண்ணூர் பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வாக்களித்தார். எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பள்ளி யில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி யில் திரைக் கலைஞர் மம்முட்டி ஓட்டு போட் டார்.

சில வாக்குச்சாவடிகளில் எந்தி ரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. மேலும் எந்திரத்தில் சின்னம் மாறியதாலும் பிரச்சினை ஏற்பட்டது. சில இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும் பிரச் சினை எழுந்தது.
அந்த வகையில் கண்ணூர் சப்பார படா வாக்குச்சாவடியில் கதீஜா என்பவரின் ஓட்டு கள்ளஓட்டாக போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. இதை தொடர்ந்து அவருக்கு ‘டெண்டர்’ ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது. காசர்கோட்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சேர்குளா அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மய்யங்களில் கள்ளஓட்டு போட முயற்சிப்பதாக இடதுசாரி முன்னணி தொண்டர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.

அந்த தொகுதியில் மலையோர பகுதியில் உள்ள மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் வந்து யாரும் வாக்களிக்கக்கூடாது என மிரட்டி சென்றனர். ஆனாலும் நேற்று (26.4.2024) பொதுமக்கள் அந்த தொகுதியில் ஆர்வமுடன் வாக்களித் ததை காணமுடிந்தது. மலையோர பகுதிகளிலும் எந்தவொரு அசம் பாவித சம்பவமும் நடைபெறவில்லை. இதனால் ராகுல் தொகுதியில் 71.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது கேரளாவின் மொத்த சதவீதத்தை விட அதிகம். இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சை கவுல் கூறு கையில், ”கேரளாவில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 6 மணிக்கு முன்னதாக வந்தவர்கள், வாக்குப்பதிவு நேரத்தை கடந்த பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்பட் டனர்” என்றார்.
கேரளாவில் மொத்த வாக்காளர் களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரத்து 159 ஆகும். இதில் மாநிலம் முழுவதும் 70.35 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *