நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடையில் ‘தாமரை’ படமா? : காங்கிரஸ் எதிர்ப்பு

2 Min Read

அரசியல், இந்தியா

புதுடில்லி, செப்.13 நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீரு டையில் ‘தாமரை’ படம் இடும் பெற்றிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட் டத்தொடர், வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடக் கிறது. முதல் நாள் மட்டும் பழைய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும். 19-ஆம் தேதியில் இருந்து புதிய நாடாளுமன்ற கட் டடத்தில் கூட்டம் நடக்கிறது.

புதிய கட்டடத்துக்கு மாறும் போது, நாடாளுமன்ற ஊழியர் களின் சீருடையும் மாறுகிறது. தேசிய ஆடை அலங்கார தொழில் நுட்ப நிறுவனங்களிடம் புதிய சீருடை எப்படி அமைய வேண்டும் என்று யோசனை கேட்கப்பட்டது. அந்நிறுவனங்கள் அளித்த வடிவ மைப்புகளில் இருந்து ஒன்றை நிபுணர் குழு தேர்வு செய்துள்ளது. 

‘தாமரை’ படம்

நாடாளுமன்ற செயலகத்தில் 5 பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். பிரிவுக்கு தகுந்தபடி, ஒவ்வொரு நிறத்தில் சபாரி சூட்டை சீருடையாக ஊழி யர்கள் அணிந்து வந்தனர். புதிய சீருடை, இந்திய தன்மையுடன் அமைந்துள்ளது. ஆண் ஊழியர் களுக்கு ‘நேரு ஜாக்கெட்’ பாணியில் இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் சீருடையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சட் டையில், ஏராளமான ‘தாமரை’ படங்கள் இடம்பெற்றுள்ளன. சபை காவலர்களுக்கு இந்த சீரு டையுடன் மணிப்பூர் தலைப்பாகை யும் உண்டு. இதுபோல், பெண் ஊழியர்களுக்கு சேலை சீருடை யாக வழங்கப்பட்டுள்ளது. தாமரை என்பது தேசிய மலர் ஆகும். இருப்பினும், அது பா.ஜனதாவின் தேர்தல் சின்னம் என்பதால், சர்ச்சை எழுந்துள்ளது. இரு அவைகளின் உள்ளேயும், வெளி யேயும் 271 ஊழியர்கள் பணியாற்று கிறார்கள். அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தாமரை படம் இடம் பெற்றதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றம் அனைத்துக் கட்சிகளுக்கும் அப்பாற்பட்டது. ஆனால் அதை கட்சி சொத்தாக பா.ஜ.க. மாற்றுகிறது.

நாடாளுமன்ற ஊழியர்கள் சீருடையில் தேசிய விலங்கு என்ப தற்காக ‘புலி’ படத்தை ஏன் போட வில்லை? தேசிய பறவை என்பதற்காக மயில் படத்தை ஏன் போடவில்லை? ஏனென்றால் அவையெல்லாம் பா.ஜ.க.வின் சின்னம் அல்ல. எவ்வளவு மலிவாக நடந்து கொள்கிறார்கள்? இந்த வீழ்ச்சியை சபாநாயகர் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *