மும்பை, ஏப். 26- எவ்வளவு பெரிய ஊழல்கள் செய் தாலும் பிஜேபியில் சேர்ந் தால் எளிதாகத் தப்பித்து விடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக மகா ராட்டிராவில் என்.சி.பி. (அஜித்பவாரின் தேசிய வாத காங்கிரஸ்) பிஜே பிக்கு ஆதரவு அளித்த நிலையில் துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி மீதான ரூ.25000 கோடி ஊழல் வழக்கை முடித்து வைத்து விட்டதாக பொருளா தார குற்றப்பிரிவு காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டனர்.
மகாராட்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலை மையில் நடைபெற்று வரும் சிவசேனா, பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு அஜித் பவார் ஆதரவு அளித்துள்ளதால், அவர் மீதான பல ஊழல் வழக் குகள் கிடப்பில் போடப் பட்டுள்ளன. மேலும், சில வழக்குகளில் அவர் விடுவிக்கப் பட்டுள்ளார்.
இவ்வாறு தொடர்ச்சி யாக பா.ஜ.க.வுக்கு யாரெல்லாம் ஆதரவு அளிக்கிறார்களோ, அல்லது பா.ஜ.க.வில் இணைகிறார்களோ அவர்கள், மோடியின் ‘வாஷிங்மெஷினில்’ துவைக்கப்பட்டு ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப் பட்டு வருகின் றனர்.
அந்த வகையில், தற் போது அஜீத் பவாரின் மனைவியும் 25 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் இருந்து விடு விக்கப் பட்டுள்ளார்.
கடந்த 2005 முதல் 2010 வரை மகாராட்டிர மாநில கூட்டுறவு வங்கி, ரிசர்வ் வங்கியின் விதி களை மீறி சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதாகப் புகார் எழுந்தது. இதனால், வங் கிக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட தாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் பேரில், 2019ஆ-ம் ஆண்டு அஜித்பவார், அவ ரது மனைவி சுனேத்ரா பவார் மற்றும் அவர்க ளது உறவினர் ரோகித் பவார் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விசா ரணை நடத்திய பொரு ளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், நீதி மன்றத்தில் வழக்கை முடித்து வைக்கும் அறிக் கையைத் தாக்கல் செய்த னர். அதில், தொழிற் சாலைகளுக்கு கொடுக்க ப்பட்ட கடனால் வங் கிக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட் டது. இதன் மூலம் சுனேத்ரா பவார் உள்ளிட்டோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க ப்பட்டுள்ளனர்.
அஜித்பவார் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் ஆளும் கூட்டணி சார்பில் பாராமதி தொகு தியில் போட்டியிடும் சூழலில், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மகாராட்டிரா அரசிய லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஊழல் வாதிகளை சுத்தம் செய் யும் பா.ஜ.வின் ‘வாஷிங் மெஷின்’ மீண்டும் வேலை செய்யத் தொடங்கி விட்ட தாக காங்கிரஸ், உத்தவ் சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித் துள்ளன.
ஒன்றிய பா.ஜ.க. அரசு – அஜீத் பவார் மனைவி சுனேத்ரா வுக்கு ‘பாவ மன்னிப்பு’ வழங்கியது பற்றிய விவரம் வருமாறு:-
அஜித் மற்றும் சுனேத்ரா பவார் என்.சி.பி (அஜித் பவார் தலைமையிலான) பிரி வின் ஒரு பகுதியாக இருக் கும்போது, ரோஹித் பவார் என்.சி.பி.யின் சரத் பவார் தலைமையிலான பிரிவின் ஒரு பகுதியாக உள்ளார்.
பாரமதி தொகுதியில் என்.சி.பி (ஏ.பி.) கட்சி சார்பில் சுனேத்ரா பவார் மக்களவையில் போட்டியிடுகிறார்.
இந்த ஆண்டு தொட க்கத்தில் முப்பத்தைந்து பக்க மூடல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், ஏப்ரல் 24 அன்று அறிக் கையின் விவரங்களை ஊடகங்கள் அணுகின.
‘தி இந்தியன் எக்ஸ் பிரஸின்’ கூற்றுப்படி, பொருளாதாரக் குற்றப் பிரிவு மூடல் அறிக்கை யில், வங்கிக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும்,
இதுவரை, 1,343.41 கோடி ரூபாய் வங்கியால் கொடுக்கப்பட்ட கட னில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது என்றும் கூறி யுள்ளது.
இந்த வழக்கு 2019 ஆம் ஆண்டுக்கு முந்தை யது. பம்பாய் உயர் நீதி மன்றத்தின் வழிகாட்டுத லின் பேரில், பொருளாதா ரக் குற்றப் பிரிவு ஒரு வழக்கைத் தாக்கல் செய் தது.
இதுபற்றி முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் எம்.எஸ்.சி வங்கி மூலம் சர்க்கரை ஆலைகளுக்கு கடன் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கா கும்.
பொருளாதாரக் குற்றப் பிரிவு வழக்கின் அடிப்படையில் பண மோசடி செய்ததாக அம லாக்கத்துறை ஒரு தனி குற்றத்தை பதிவு செய்தது. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் அஜித் பவார் தவிர சரத் பவார் தலைமையிலான என்.சி.பி. பிரிவு சட்டப் பேரவை உறுப்பினர் பிர ஜாக்த் தன்புரே பெயரும் உள்ளது.
பொருளாதாரக் குற்றப் பிரிவு வழக்கைப் போன்று அடிப்படைக் குற்றம் இல்லாத நிலை யில், அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தொடர முடியாது.
மார்ச் மாதம், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘உண்மை யின் தவறு காரணமாக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொருளாதாரக் குற்றப் பிரிவு கூறியது.
சதாராவில் உள்ள ஜரந்தே ஷ்வர் சர்க்கரை சககாரி கார் கானா என்ற சர்க்கரை ஆலையை விற் பது தொடர்பான பரி வர்த்த னையில் பவார்கள் தங்களை இணைத்துக் கொண்டதாக பொருளா தாரக் குற்றப் பிரிவு குற்றம் சாட்டியது.
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அறிக்கையானது, கூட்டு றவு வங்கிகளில் கடன் வாங்கிய போதிலும், அதன் நிதிநிலை மோச மடைந்ததை அடுத்து, 2010இல் ஒரு குருகமா டிட்டி சர்வீசஸ் லிமி டெட் நிறுவனத்திற்கு அறுபத்தைந்து கோடி ரூபாய்க்கு தொழிற்சாலை விற்கப்பட்டதாக அம லாக்கத்துறை விசார ணையை சுட்டிக்காட்டி யுள்ளது.
1995ஆம் ஆண்டு முதல் அஜித் பவார் இயக் குநராக இருந்த புனே மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கி உள்ளிட்ட வங்கிகளால் சர்க்கரை ஆலைக்கு கடன்கள் வழங்கப்பட்டதாகவும், அது செயல்படாத சொத் தாக மாறிய பிறகு, அதன் விற்பனை நடைபெற்றது என்றும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள் ளது.
தனது உறவினர்களு டன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுடன் ஜராந்தேஷ்வர் சுகர் மில்ஸ் (ஜே.எஸ்.எம்.) பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜே அக்ரோடெக் ஆகிய இரு நிறுவனங்க ளால் தொழிற்சாலையை வாங்குவதற்கான பணத்தை வாங்குபவ ருக்கு வழங்கியதாக விசா ரணையில் மேலும் குற் றம் சாட்டப்பட்டது.
பவாரின் மனைவி சுனேத்ரா 2008ஆம் ஆண்டு வரை ஜே அக் ரோடெக் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார் மற்றும் அவரது மாமா ராஜேந்திர காட்ஜ் ஜே. எஸ்.எம். இயக்குநராக இருந்தார்.
ஏப்ரல் 1, 2004 முதல் ஜூலை 18, 2008 வரை சுனேத்ரா இயக்குநராக இருந்ததால் ஜே அக் ரோடெக் நிறுவனத்து டன் இணைக்கப்பட வில்லை என்றும் விற் பனையின் போது அல்ல என்றும், பொருளாதாரக் குற்றப் பிரிவு இப்போது கூறியுள்ளது. அதேபோல், ரோஹித் பவாருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு கூறுகிறது.சில மாதங்களுக்கு முன்பு, ரோஹித் பவாரை அம லாக்கத் துறை பல முறை விசாரணைக்கு அழைத்தது.
பலமுறை அழைப் பானைகளுக்குப் பிறகு, ரோஹித் இந்த ஆண்டு ஜனவரியில் அமலாக்கத் துறை முன் ஆஜரானார், மேலும் அம லாக்கத் துறை அழைப்பானைகள் பா.ஜ.கவின் உத்தரவின் பேரில் ஒரு துன்புறுத்தல் தந்திரமாக பார்க்கப்பட் டது.
பிப்ரவரியில், ரோஹித் பவார், அமலாக்கத் துறை தன்னிடம் ஒரே மாதிரியான கேள்வி களை மீண்டும் மீண்டும் கேட்கிறது என்று கூறியிருந்தார்.நான் சிறையில் அடைக்கப்பட்டால் மட்டுமே விசாரணை கள் நிறுத்தப்படும் என்று அவர் அப்போது கூறியிருந்தார்.
‘யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை’ என்ற சொலவடை போன்று பா.ஜ.க ஆதரவு இருந்தால் எந்த விதமான ஊழலுக்கும் பாவமன் னிப்பு வழங்கப்படும் போல என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
பிஜேபியில் சேர்ந்தால் ஊழல் திமிங்கலங்கள் தப்பலாம் ரூ.25,000 கோடி ஊழல் வழக்கிலிருந்து அஜித்பவார் மனைவி விடுவிப்பு
Leave a comment