தாலி பற்றிய சர்ச்சை பேச்சு மோடியை கண்டித்து மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

1 Min Read

சென்னை, ஏப். 26- பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தாலிக்கு நீதி கேட்டு, தாலிக் கயிறு கையில் ஏந்தி, தமிழ்நாடு மகளிர் காங்கிரசார், சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று (25.4.2024) ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி பேசுகையில், ‘காங்கிரஸ் மேனாள் பிரதமர் மன்மோகன்சிங், முஸ்லிம்களுக்கு தான் நாட்டின் சொத்துக்களில் முதல் உரிமை உள்ளது’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ‘நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த தங்கத்தை பறித்து, அதிக குழந்தைகள் பெறுபவர்களுக்கு கொடுப்பது தான் காங்கிரசின் திட்டம். இதில், உங்களுடைய தாலியும் தப்பாது’ என்றார்.

பிரதமர் மோடியின் இந்த சர்ச்சை பேச்சை கண்டித்து, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் தலைமையில், மகளிர் காங்கிரசார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், பங்கேற்ற அனைவரும் தங்கள் கைகளில் தாலி கயிறு ஏந்தி, தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *