காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பிரதமர் திரிபுவாதம் செய்து பேசுவது சரியல்ல நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயார் பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்

2 Min Read

புதுடில்லி, ஏப்.26 காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்று அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத் தியில் ஆளும் பாஜக அரசு கார்ப் பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. உணவு வகைகள், உப்புக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நேரடியாக பாதிக் கப்படுகின்றனர். நாங்கள் ஏழைகள், பணக்காரர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு குறித்து பேசுகிறோம். ஆனால் நீங்கள் (மோடி), காங்கி ரஸின் கருத்தை திரித்து இந்துக்கள், முஸ்லிம்களை ஒப்பிட்டு பேசுகிறீர்கள்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், ஜெயின், பவுத்த மதம் என அனைத்து தரப்பினரின் நலன்களை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள் ளோம். ஆனால் நீங்கள் உங்களது பழைய உறவை இன்னும் மறக்க வில்லை என்றே கருதுகிறேன். அதா வது சுதந்திரத்துக்கு முன்பாக முஸ்லிம் லீக், ஆங்கிலேய ஆட்சியா ளர்களுடன் நீங்கள் சுமுகஉறவு கொண்டிருந்ததை இன்னும் மறக்க வில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜக அரசு பதவி யேற்ற பிறகு கார்ப்பரேட் நிறுவ னங்களின் பல லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் மக்களின் பணம், கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சியில் விவசாயிகளின் கடனோ, கல்விக் கடனோ, குறு, சிறு நிறுவனங்களின் கடனோ இது வரை தள்ளுபடி செய்யப்படவில்லை.

மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில கலவரத்தில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரங்களுக்கு யார் பொறுப்பு? தாழ்த்தப்பட்ட பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றனர். இதில் தொடர் புடைய நபர்களுக்கு பாஜக சார்பில் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலா ளர்கள், பல்வேறு ஜாதிகள், சமு தாயங்களை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த தேர்தல் அறிக்கையின் அர்த்தம் புரியவில்லை என்றால் உங்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் இனிமேலும் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது. இவ்வாறு கார்கேவின் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *