தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தாம்பரம். ஏப்.26- திருப் பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் குரோம் பேட்டையில் உள்ள எம்.அய்.டி. கல்லூரியில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட் டுள்ளது.
தி.மு.க. அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி 24.4.2024 அன்று கல்லூரி வளாகத் திற்கு வந்து வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு அளித்தபேட்டி வரு மாறு:
திருப்பெரும்புதூர் தொகுதி கழக வேட்பாளர் டி.ஆர். பாலு வின் தலைமை முகவர் என்ற முறையில் வாக்குப்பெட்டிகள் உள்ள குரோம்பேட்டை எம்.அய்.டி. கல்லூரி வளாகத் தில் பார்வையிட வந்தேன்.
கல்லூரி வளாகத்தில் என்னைத் தவிர வேறு யாரை யும் அனுமதிக்கவில்லை. காவல் துறை மிகவும் நேர்மை யாகவும், நடுநிலையுடனும் செயல்படு கின்றனர்.
மூன்று, நான்கு இடங்களில் முழுமையாக சோதனை நடத் திய பின்னரே உள்ளே அனு மதித்தனர். ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறை அருகே மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணி களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனருகே தமிழ்நாடு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தூரத்தில் இருந்து பார்த்த போது வைக் கப்பட்ட ‘சீல்’ பாதுகாப்பாக இருப்பது தெரிந்தது.
மோடி ஆட்சியில் எது எப் படி நடக்கும் என்பதை யாரா லும் கணிக்க முடியவில்லை. தேர்தல் ஆணையமே நடுநிலை தவறிவிட்டது. சந்தேகங்கள் வலுக்கும் காரணத்தால் ஒவ் வொரு நாளும் கண்ணும் கருத்துமாக கண்காணிப்பது எங்கள் கடமை. ஏனென்றால் திருப்பெரும்புதூர் தொகுதி யில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெறுவது உறு தியாகி விட்டது.
கட்சி நிர்வாகிகள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க. கூட்டணி தோல்வி யடையப் போவது உறுதி என் பதை தெரிந்துதான் மோடி இப்படி எல்லாம் பேசுகிறார்.
முன்பிருந்த மோடியின் முகத்திற்கும் தற்போது தேர் தல் பிரச்சாரத்தின் போது அவரது முகத்தில் தோல்வி பயம் வந்து விட்டது.
எனவேதான் தேவையில் லாமல் சர்ச்சைக்குரிய பேச்சு களை பேசுகிறார். பதவிப் பிர மாணம் ஏற்றுக் கொண்ட பிறகு ஒரு குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துகின்ற அளவிற்கு பேசுகிறார் என்றால் அது எந்த விவதத்தில் நியாயம். மதக் கல வரத்தை நடத்தி அதன் வாயி லாக தேர்தலை நடத்தி முடித்து விடலாம் என்ற வஞ்சக எண்ணத்தில் பேசினாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத் துகிறது.
தமிழ்நாட்டில் எந்த அசம் பாவிதங்களும் இல்லாதபடி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்தியா பிரிகின்ற காலத்தில் ஜின்னா அழைத்தபோது நாங்கள் பிறந்த மண்ணில்தான் இருப்போம் என இருந்த இஸ்லாமியர்களை, களங்கப்படுத்திடும் வகையில் பிரதமரின் பேச்சு உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பெரிய வெற்றி வரும் என மோடி எதிர்பார்க்கிறார். ஆனால், அங்கும் வெற்றி வாய்ப்பு குறைவா கவே இருக்கும். இந்தியா கூட் டணி 380க்கும் மேற்பட்ட சீட்டுகளை பெற்று வெற்றி பெறும். பேச்சை மாற்றி மாற்றி பேசுவதில் மோடி வல்லவர். இந்தியாவில் உள்ள பிரதமர் களில் கீழ்த்தரமான பேச்சை பேசும் பிரதமர் இவரை தவிர வேறுயாகும் இல்லை. பிரதமர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை.
-இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார்.