புதுடில்லி, ஏப். 26- நாட்டில் 90 சதவிகித மக்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது – ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்! என்று புதுடில்லி சமூகநீதி மாநாட்டில் ராகுல் காந்தி முழக்கம்.
கடந்த 24-4-2024 அன்று டில்லியில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்குரைஞர் வில்சன் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, இந்தியாவில் ஏழைகளின் பட்டியலை எடுத்தால், அதில் ஓ.பி.சி., தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரே அதிகம் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்ததும் மோடி ஓ.பி.சி., குறித்து பேசுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார். பெரிய நிறுவனங்கள், மருத்துவ மனைகள் மற்றும் நீதித்துறையில் ஓ.பி.சி., தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்தோர் மிகக் குறைவாகவே உள்ளனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
நாட்டில் 90 சதவீத மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, அது குறித்து கேள்வி எழுப்பினால் ஒன்றிய பா.ஜ.க., அரசிடம் பதில் இல்லை என்று கூறியுள்ளார். திசை திருப்பும் விதமாக பா.ஜ.க.,வினர் பிரிவினை குறித்து பேசுகிறார்கள் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
கடந்த 10 ஆண்டுகளாக மோடி தன்னைத்தானே ஓ.பி.சி. என்று கூறிக்கொள்கிறார். இந்தியாவில் ஏழைகள், பணக்காரர் கள் என்ற இரண்டு ஜாதிகள்தான் உள்ளன. நான் எப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன் னேனோ, அப்போது இருந்து ஓ.பி.சி. என்ற வார்த்தையையே மோடி கைவிட்டுவிட்டார்
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது, ஜாதியைப் பற்றியது மட்டுமல்ல; யாருக்கு எவ்வளவு பொருளாதார உதவிகள் சென்று சேர்கிறது என்பது குறித்த விசயம் நாட்டில் 90% மக்களுக்கு அநீதிதான் இழைக்கப்படுகிறது. அதுகுறித்து கேள்விக்கு பா.ஜ.க.வினரிடம் பதில் இல்லை என்று ராகுல் தெரிவித்தார்.