பெரும் பணக்கார நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தவர் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப். 26- தனது பெரும் பணக்கார நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி யுள்ளார். தனது எக்ஸ்சமூக வலைதளப் பக்கத் தில் ராகுல் கூறியுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, தனது பெரும் பணக்கார நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக் கிறார். இந்த பணம் இந்தியர்களின் வலியை, தேவையை சரிசெய்வதற்கு பயன் படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் ‘அதா னிகள்’ போன்றவர்களை உருவாக்குவதற் காக செலவிடப்பட்டிருக்கிறது.

இந்த பணத்தில் சுமார் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வழங்கியிருக்க முடி யும். 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1லட்சம் வழங்கியிருக் கலாம். 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற் கொலை செய்துகொண்ட விவசாயிக ளின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்க முடியும். 20 ஆண்டுக ளுக்கு ரூ.400-க்கு சமையல் எரிவாயு உருளை களை மொத்த நாட்டுக்கும் வழங்கியிருக்க முடி யும். இந்தப் பணத்தின் மூலம் இந்திய ராணுவத்தின் மொத்த செல வையும் 3 ஆண்டுகளுக்கு ஏற்றிருக்கலாம்.

பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியி னர்களுக்குபட்டப்படிப்பு வரையிலான கல்வியை இலவசமாக வழங்கியிருக்க லாம். இந்தியர்களின் வலியைக் குணப் படுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண் டிய பணம், அதானிகள் போன்றவர்க ளுக்காகச் செலவழிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றத்துக்காக நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட் டார்கள். இனி நிலைமை மாறும்.ஒவ் வொரு இந்தியனின் முன்னேற்றத்துக் காகவும் காங்கிரஸ், அரசை வழிநடத்தும். இவ்வாறு ராகுல் காந்தி அதில் கூறி யுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *