புதுடில்லி, ஏப். 25- இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள். சேர்க் கப்படுவதாக கூறி, அவற்றுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, இந்திய மசாலா பொருட்களுக்கு பன்னாட்டு அளவில் தடை விதிக்கும் நடவடிக் கைகள் முடுக்கி விடப்பட்டு இருப்ப தாக தகவல்கள் கூறுகின்றன.
பிரபல இந்திய மசாலா பிராண் டுகளான MDH மற்றும் EVERES நிறுவனத்தைச் சேர்ந்த சில தயா ரிப்புகளில் காணப்படும் மூலப் பொருள் புற்றுநோயை உண்டாக் கும் என்று குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இதுதொடர்பாக உணவுக் கட் டுப்பாட்டாளர்கள் கவலைகளை எழுப்பியதையடுத்து, சிங்கப்பூர் மற் றும் ஹாங்காங்கில் அதன் தயாரிப் புகள் தடைசெய்யப்பட்ட தாக கூறப் படுகிறது.
இந்திய மசாலா பொருட்க ளுக்கு உலக அளவில் பெரும் வர வேற்பு உண்டு. இதனால், இந்திய மசாலா பொருட்கள் பன்னாட்டு அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய மசாலா பொருட்களில் ருசிக்காக சேர்க்கப் படும் ரசாயனப் பொருள் புற்று நோயை உண்டாக்கும் தன்மை உடையது என உணவு ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதன்படி, எம்டிஹச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் 4 மசாலா பிராண்ட் களில் எத்திலீன் ஆக்சைடு என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவை மனிதர்கள் உணவில் சேர்த்து கொண்டால் நீண்ட கால அடிப்படையில் ஆபத்து ஏற்படும். புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என கூறப்படுகிறது.
எம்டிஹச் Curry Powder, Mixed Masala Powder, Sambhar Masala மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் Fish Curry Masala ஆகியவற்றில் உள்ள மூலப்பொருள் நச்சுத்தன்மை உடையது என்று குற்றம் சாட்டப் பட்டு உள்ளது. இதையடுத்து, ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் இந் திய மசாலா பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இவற் றுக்கு ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாட்டில் உள்ள உணவுப்பொருள் ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்து உத்தர விட்டுள்ளது.
உடனடியாக கடைகளில் இருந்து மேற்குறிப்பிட்ட மசாலா பாக்கெட் களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட் டுள்ளது. நச்சுப் பொருள் இருப்பதாக கூறப்படும் மசாலா பாக்கெட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திரும் பப் பெற்று கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது.