மார்க்சிஸ்ட் கட்சி: திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகார்

viduthalai
1 Min Read

புதுடில்லி.ஏப்.25- திரிபுரா மாநிலத்தில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் எழுப்பி உள்ளது. நாடெங்கும் 18ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

தமிழ்நாடு (39 தொகுதிகள்), உத்தராகண்ட் (5), அருணா சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிகோபார் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), ராஜஸ்தான் (12), உத்தரப்பிரதேசம் (8), மத்தியப் பிரதேசம் (6), அசாம் (5), மராட்டியம் (5), பீகார் (4), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), காஷ்மீர் (1), சத்தீஷ்கர் (1) என 102 தொகுதிகளில் இந்தத் தேர்தல் நடந்தது.

திரிபுரா மாநிலத்தில் முதற்கட்டத் தேர்தலின்போது குறிப் பிட்ட 4 வாக்குச்சாவடிகளில் மொத்த வாக்குகளை விடக் கூடுதல் வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார் அளித்துள்ளது.மார்க்சிஸ்ட் கட்சியின் புகாரில், “545 வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடியில் 574 வாக்குகள் பதிவாகியுள்ளது., 1,290 வாக் காளர்கள் உள்ள மற்றொரு வாக்குச்சாவடியில் 1,292 வாக்குகள் பதிவாகியுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது இந்தப் புகாரால் குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு பதிவு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திரி புராவில் முதற்கட்டத் தேர்தலின் போது 79.90 சதவீதம் வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *