டில்லி சமூக நீதி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கருத்துரை வாசிப்பு
புதுடில்லி, ஏப். 25- புதுடில்லியில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில், தி.மு.கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் பங்கேற்றார்.
இம்மாநாட்டில் தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை மூத்த வழக்குரைஞர்
பி.வில்சன் படித்தார்.
அவ்வுரையில், ‘தி.மு.கழகத்தின் சமூக நீதிக் கொள்கை, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றது கண்டு பெரிதும் உவகை கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
மேலும், “சமூக நீதியின் ஒளிவிளக்காக தமிழ்நாடு திகழுகிறது” என்று தமது உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
புதுடில்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் தி.மு. கழகத் தலை வரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உரையை அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் வாசித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை வருமாறு:-
இன்று நாம் கூடியுள்ள வேளையில், இந்தியாவில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு ஆற்றிய முக்கியப் பங்கை அங்கீகரிப்பது மிகுந்த பொருத்தமானது எனக் கருது கிறேன்.
சமூகநீதிக்கான ஒளிவிளக்காகத் தமிழ்நாடு திகழும் மரபு 1921-ஆம் ஆண்டு நீதிக்கட்சி அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அறிமுகப்படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையில் இருந்தே தொடங்குகிறது.
விடுதலைக்குப் பிறகு, இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து வந்தபோது, திராவிட இயக்கத்தால் முன்னெடுக் கப்பட்ட உறுதியான போராட்டங்களால்தான் முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்குக் காரணம்,‘happenings in Madras’ என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒடுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்துவதற்கான நட வடிக்கைகள் தொடர்வதை இந்தச் சட்டத்திருத்தம் உறுதிசெய்தது.
தற்போது, பிற்படுத்தப் பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69% ஆக உள்ளது.
இட ஒதுக்கீட்டின் அளவு 50%அய்த் தாண்டக்கூடாது எனத் தன்னிச்சையாக விதிக்கப்பட்ட அளவைவிடவும் கூடுதலாகத் தமிழ்நாட்டில் இது நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக, தொழில்முறைப் பட்டப்படிப்பு களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதோடு, அவர்களுக்கான கல்வி, விடுதிச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் எனவும் அண்மையில் அறிவித்துள்ளோம்.
மேலும், கிறித்தவத்துக்கு மதம் மாறிய ஆதி திராவிடர் களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது.
தி.மு.கழகத்தின் சமூகநீதிக் கொள்கைகளை எதிரொ லிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதைக் கண்டு நான் உவப்படை கிறேன்.
அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடி யினத்தவர்களை உயர்த்தும் வகையில் தனது வாக்குறுதிகளை நிறை வேற்றும் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்.
இவ்வாறு அக்கூட்டத்தில் படிக்கப்பட்ட முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரையில் குறிப்பிடப் பட்டிருந்தது.