சாமியார் ராம்தேவின் வழக்கு பதஞ்சலி விளம்பரத்துக்கு இணையாக மன்னிப்பும் இருக்க வேண்டும்! உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு

Viduthalai
3 Min Read

புதுடில்லி,ஏப்.24- சாமியார் ராம் தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற் பனை செய்து வருகிறது.
கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறு வனம் மீது – தவறான விளம் பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங் களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று எச் சரித்த உச்ச நீதிமன்றம், பதிலளிக் கக் கோரி அந்நிறுவனத்துக்கு தாக்கீது அனுப்பியது.
இதையடுத்து தாக்கீதுக்கு பதிலளிக்காததால், அந்நிறு வனத்தின் இணை நிறுவனர் சாமியார் ராம்தேவை நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.
வழக்கு தொடர்பாக ஏற்கெ னவே பிரமாணப் பத்திரம் தாக் கல் செய்த நிலையில் சாமியார் ராம்தேவ் கடந்த 2ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜ ரானார். அப்போது, பிரமாணப் பத்திரம் திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தியை தெரிவித்தனர்.

சாமியார் ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இரு வரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். மன்னிப்பு என்ற பெய ரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பித்து விட லாம் என நினைக்காதீர்கள் என சாமியார் ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித் தனர்.
மேலும், நீங்கள் செய்திருப் பது மிக தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு செயல், மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப் பிக்க முடியாது என்று நீதிபதிகள் காட்டத்துடன் தெரிவித்தனர். அத்துடன், புதிய பிரமாணப் பத் திரத்தை தாக்கல் செய்ய இரு வருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்த னர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை கடந்த 16ஆம் தேதி மீண்டும் நடைபெற் றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க வேண்டும் என்று சாமியார் ராம்தேவ், ஆச்சார்யா பால கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிப திகள் மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கி யது யார்?; நிரூபணமற்ற அலோ பதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில், பதஞ்சலி நிறுவனர் சாமியார் ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக் குநர் ஆச்சார்யா பாலகிருஷ் ணன் ஆகியோர் பொது மன் னிப்பு கோர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையடுத்து 22.4.2024 அன் றைய நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு சாமியார் ராம்தேவ் பொது மன்னிப்புக் கோரினார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று (23.4.2024) நடைபெற்றது. அப்போது நாளி தழ்களில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்புக் கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறு வன வழக்குரைஞர் தாக்கல் செய்தார்.
அதனை பார்த்த நீதிபதிகள் மன்னிப்புக் கோரும் விளம்பரங் கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என்றும் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போன்ற சிறிய அளவில் தான் வெளியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
பொருளை விளம்பரப்படுத் துவது போல, மன்னிப்பும் மிகப் பெரிய அளவில் புதிய விளம்பர மாக வெளியிட்டு அதை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண் டும் என நீதிபதிகள் உத்தரவிட்ட னர். மேலும் இந்த வழக்கு விசா ரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *