ஜெய்ப்பூர், ஏப்.24 காங்கிரஸ் ஆளும் மாநிலங் களில் அனுமன் பாடல்கள் கேட்பது கூட குற்றமாக இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
மக்களவைத் தேர்தலுக் கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 26_4_2024 அன்று நடை பெற உள்ளது. இதை யொட்டி ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மதோபூர் தொகுதியில் பாஜக சார்பில் நேற்று (23_4_2024) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன் கடைக் காரர் ஒருவர் அனுமன் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்ததற்காக கொடூரமாக தாக்கப்பட்டார்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனுமன் பாடல்களை கேட்பது கூட குற்றமாக உள்ளது. ராஜஸ்தானினும் இத் தகைய பாதிப்பு உள்ளது. ராஜஸ்தானில் முதல் முறையாக இம்முறை ராம நவமிக்கு ஷோபா ஊர்வலம் நடைபெற் றுள்ளது. மக்கள் ராம்-ராம் என முழக்கமிடும் ராஜஸ்தான் போன்ற ஒரு மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித் திருந்தது. ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக் கீட்டை உடைத்து தங்க ளின் சிறப்பு வாக்கு வங்கிக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்க நினைத்தார்கள்.. அதேசமயம் அரசமைப்பு சட்டம் இதற்கு முற்றிலும் எதிராக உள்ளது. இட ஒதுக்கீடு உரிமையை தலித், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் ஆதிவாசி களுக்கு அம்பேத்கர் வழங் கினார். ஆனால் காங்கிர ஸும், இண்டியா கூட்ட ணியும் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க விரும்பின.
திருப்திப்படுத்துதல் மற்றும் வாக்கு வங்கி அரசியல்தான் எப்போ தும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக உள்ளது. 2004-இல் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது, அவர்கள் முதல் காரியமாக ஆந்திராவில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்தனர். காங்கிரஸ் அரசு நாடு முழுவதும் செயல்படுத்த விரும்பிய முன்னோடி திட்டமாக இது இருந்தது. 2004 முதல் 2010 வரை அவர்கள் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை 4 முறை அமல்படுத்த முயன்றனர். ஆனால் சட்டரீதியான தடைகள் மற்றும் உச்ச நீதிமன்ற எச்சரிக்கை காரணமாக அமல்படுத்த முடியவில்லை. 2011இ-ல் இதை நாடு முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்பியது. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகளை மற்றவர்களுக்கு வழங்க விரும்பியது. இது அரச மைப்பு சட்டத்துக்கு எதிரானது எனத் தெரிந் தும் காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண் டது. இவ்வாறு அவர் பேசினார்.