புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மறைவு நாளான ஏப்ரல் 21 மற்றும் பாவேந்தர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆகிய இரண்டு நாட்களையும் இணைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்படி தமிழர்களின் துணைத்தலைவர் கவிஞர் அவர்களின் வழிகாட்டுதலோடு “நமக்கான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்” என்னும் பொருளில் அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்வுகளை நடத்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்வுகளை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்டத்திற்கு ஏற்ற வகையில் கவியரங்கம், கருத்தரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப்போட்டி நடத்துதல், குடும்பங்கள் கூடுதல், போன்று நடத்திடலாம்.
உடன் மாநில துணைப்பொதுச்செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பு கவனம் கொண்டு செயல்பட்டு ஒவ்வொரு மாவட்ட செயல்பாடுகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– பகுத்தறிவாளர் கழகம்.