பிரதமரின் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பேச்சு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம்

viduthalai
3 Min Read

புதுடில்லி, ஏப்.23- முஸ்லிம்களுக்கு வளங் களை காங்கிரஸ் பகிர்ந்து அளித்துவிடும் என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

காங்கிரஸ்
பிரதமர் மோடி 21.4.2024 அன்று ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய போது, “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், உங்களிடம் உள்ள தங்கத்தையும், கடினமாக உழைத்து சம்பா தித்த பணத்தையும் பறித்து, ஊடுருவல்காரர்களுக் கும், அதிக குழந்தைகள் பெறுபவர்களான முஸ்லிம்களுக்கும் பகிர்ந்து அளித்துவிடும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் இல்லாத ஒன்றை மேற்கோள் காட்டி இருக்கிறார். தேர்தல் ஆதாயத்துக்காக வாக்குகளை மத ரீதியாக ஒருங்கிணைக்க முயற் சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

சீதாராம் யெச்சூரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செய லாளர் சீதாராம் யெச்சூரி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியின் பேச்சு கொடூரமானது. தேர்தல் ஆணையத்தின் மவுனம் இன்னும் கொடூரமானது. மோடியின் பேச்சு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதுடன், வெறுப்பு பேச்சு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக உள்ளது.
ஆகவே, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடருவதுடன், பிரதமர் மோடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கீது வழங்கி தண்டனை வழங்க வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சிகள் சொல்வதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. மோடிக்கும். பா.ஜனதாவுக்கும் சுதந்திரம் அளித்துள்ளது. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு பொறுப்புடையது அல்ல, ஆனால் மக்களுக்கு பொறுப்புடையது.
ஆகவே, ஆயிரம் பொறுப்புள்ள குடிமக்கள், மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கபில்சிபல்
மேனாள் ஒன்றிய அமைச்சரும், மாநிலங் களவை உறுப்பினருமான கபில் சிபல் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித் தார்.
அவர் கூறியதாவது:-
பிரதமரின் பேச்சு,கோடிக்கணக்கான மக்க ளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பிரதமர் பதவியையும், அதில் அமர்ந்திருப்பவரையும் மதிப்பவன் என்பதால், எனக்கும் ஏமாற்றம் அளித்தது. ஆனால், அந்த மரியாதைக்கு பிரதமர் உரியவர் அல்ல என்னும்போது, நாட்டின் அறிவுஜீவிகள் கண்டிக்க முன்வர வேண்டும்.
1950-ஆம் ஆண்டில் இருந்து வேறு எந்த பிரதமரும் இது போன்று பேசியது இல்லை. பல ஆண்டுகளாக நம் நாட்டில் வாழும் சிறுபான்மையினரை ‘ஊடுருவல்காரர்கள்’ என்று அவரது பேச்சு சுட்டிக் காட்டுகிறது. இது என்ன மாதிரி அராசியல்?

தேர்தல் ஆணையம் கருத்து கூற மறுப்பு
ராமன் கோவிலை திறந்து அவரது லட்சியங் களை பேசுகிறீர்கள். ஆனால், மற்றொரு புறம் வெறுப்பை பரப்புகிறீர் கள். ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ன ஆனது?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மவுனம் சாதிப்பது ஏன்? இந்திய வரலாற்றில் இவ்வளவு கீழே இறங்கி எந்த தலைவரும் பேசியது இல்லை. தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவிப்பதுடன், மோடிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பிரதமர் மோடியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணைய செய்தித் தொடர் பாளரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை” என்று கூறினார்.

தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் இதற்கிடையே, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக் கக்கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது. மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தலைமையிலான குழு, அம்மனுவை அளித்தது. பிரதமர் மோடி உள்பட பா. ஜனதாவினர்மீது 16 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.
ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் ஒரு மதத்தை குறி வைத்து பிளவுபடுத்தும் நோக்கத்துடன் பிரதமர் பேசியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி விட்டதாகவும். மனுவில் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
இதுபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது.

காவல்துறையில் புகார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பிருந்தா கரத், புஷ்விந்தர் சிங் கிரே. வால் ஆகியோர் டில்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் பிரதமர் மோடியின் கருத்து குறித்து புகார் செய்ய முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அந்த புகாரை ஏற்க மறுத்ததால், அந்த புகார் மனு டில்லி காவல்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *