என்ன சாப்பிட வேண்டும் என்பதை பி.ஜே.பி. முடிவு செய்ய முடியுமா? முதலமைச்சர் மம்தா கேள்வி

1 Min Read

கொல்கத்தா, ஏப்.23- மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் மால்டா நகரில் திரி ணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 20.4.2024 அன்று பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட் சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பேசியதாவது:

ஏன் மீன் சாப்பிடுகிறீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி சில நாள் களுக்கு முன்பு கேள்வி எழுப்பினார். கோழி முட்டை, இறைச்சியை ஏன் சாப்பிட வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என அவர்கள் எப்படி முடிவு செய்ய முடியும்.

இட்லி, தோசை மற்றும் பிற மாநிலங்களின் உணவை நீங்கள் சாப் பிடக் கூடாது என நாங்கள் கூற முடி யுமா? நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 80% பேர் மாமிசம் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள்.

இந்நிலையில், பாஜக ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், உத்தரப் பிர தேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மாமிச கடை கள் மூடப்படுவதாக கேள்விப்பட் டேன்.
நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு கட்சி, ஒரு நபர் எப்படி முடிவு செய்ய முடியும்? இவ்வாறு அவர் கேள்வி எழுப் பினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *