நீண்ட காலத்துக்கு பா.ஜ.க. அரசியல் கட்சியாக இருக்காது! ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும்! ஒன்றிய மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், ஏப்.23- “பா.ஜ.க. நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சி யாக இருக்காது. அது பிரதமர் நரேந்திர மோடியை வழிபடும் தலமாக மாறியுள்ளது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் 21.4.2024 அன்று செய்தியாளர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது;

“இந்தியாவின் மிகப் பெரிய சவால் வேலையின்மை. இதை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சினை. எனது அனுபவத்தில் இவ்வளவு அதிகமான வேலையின்மை விகிதம் இருந்ததே கிடையாது. பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதி கரித்துள்ளது. பட்டதாரிகளின் வேலையின்மை 42 சதவீதமாக உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ‘இந்தியா கூட் டணி வெற்றிபெறும். அதேபோல், வரக்கூடிய 26ஆம் தேதி கேரளாவில் நடைபெற உள்ள மொத்தமுள்ள 20 மக்களவைக்கான தேர்தலிலும் ‘இந் தியா’ கூட்டணி வெற்றிபெறும் என நம்புகிறேன்; வெற்றிபெற வைக்க வேண்டும் என கேரள மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். பா.ஜ.க. 14 நாட்களில் தேர்தல் அறிக்கையை உருவாக்கியது.

தேர்தல் அறிக்கை என்று அதற்கு பெயரிடப்படவில்லை. அதை மோடி யின் உத்தரவாதம் என்கிறார்கள். பா.ஜ.க .நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சியாக இருக்காது. அது ஒரு வழிபாடாக மாறிவிட்டது. அந்த வழிபாடு பிரதமர் நரேந்திர மோடியை வழிபடும் வழிபாடாக மாறியுள்ளது. இந்தியாவில் அந்த வழிபாடு வலுப் பெற தொடங்கியதும், சர்வாதிகாரத் துக்கு வழி வகுக்கும்.
மோடி மீண்டும் 3ஆவது முறை யாக ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பை திருத்தலாம். 10 ஆண்டு களில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் இணைந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங் கள் உள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய குடியு ரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) தொடர்பாக எதும் குறிப்பிடப்பட வில்லை என்றாலும், ‘இந்தியா’ கூட் டணி ஆட்சிக்கு வந்ததும் அது ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்துள் ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *